Sunday, May 6, 2007

காதில் முத்தம்



காதில் என்னை
முத்தமிடச் சொன்னது
எந்தன்
காதலின் காதில்
நீ
பூ சுற்றத்தானோ!

Monday, March 5, 2007

மேகக்கூட்டம்

கவிதையா?
நான்கு வரிகளிலென்றால்.. சரி!

சிறுகதையா?
துணுக்கின் படிவமென்றால்.. சரி!

நோவல்?
நேரமேயில்லை!

பாடல்?
நல்லிசையோடிருந்தால் - அல்லது
இசை பாடலை ஆக்கிரமத்தால்!

என்னாதான் வேண்டும்?
ஒன்றும் வேண்டாம்
எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
அதுவே இலக்கணத்தின் உச்சம்!

ஒரு சமுதாயம் முன்னேறவும்
அழியவும் சினிமாவும் காரணமா !!!

இந்த கால சினிமா
முன்வைக்கும்
வன்முறையும் ஆடையில்லா ஆட்டமும் - என்
கண்முன்னே ஓடி வர...

கோபத்தாலென் இமைகளை
இழுத்தி மூடினது கண்கள்

என் மனத்திரையில்
ஆஸ்திரேலிய காடுகள்
எரிந்துகொண்டிருக்கின்றன...

சினிமா சுருள்களை நானந்த
நெருப்பிலிட்டு மகிழ்கிறேன்

மஞ்சள் புகையும் சிவப்பு புகையும் பொங்கி வர
வெட்கத்துடனும் பயத்துடனும்
விரண்டோடுகிறது மேகக்கூட்டம்!

Saturday, March 3, 2007

நியாமான எதிர்பார்ப்புகள்


தாய்தந்தையர் பிள்ளைகளிடம்
தேடும் பாசமும் நன்றியும்

முதல் மாணவனின் தோள்கள்
தேடும் சமூகத்தின் பாராட்டு

அழகிய குழந்தையின் புன்னகை
தேடும் பாச ஸ்பரிசம்

கலைஞர்களின் உழைப்பு
தேடும் கரகோஷம்

கவிஞனின் கவிதைகள்
தேடும் மௌன நொடிகள்

மண்ணின் மைந்தர்கள்
தேடும் சுதந்திரம்

ஆசை வேண்டாமென்று சொன்ன புத்தர்
தேடும் ஆசையற்ற சமூகம்

கடமை செய் பயனை எதிர்பாராதே என்ற கீதை
தேடும் தர்மமும் சத்தியமும்

Thursday, March 1, 2007

சிந்திப்போம்

விரல்களிழந்தவனின்
நிலையுணர்தல்
மோதிரமில்லையென்ற
கவலை தீர்க்கும்!

அகதிகள் முகாமில்
ஒரு நொடி வாழ்தல்
அவர்களின் விடியலில் தான்
நம் சுதந்திரம் என்றிடும்!

அடுத்தவனின் நிலையறியும்
அழகிய ஒற்றை வழி
அவன் நிலையிலிறிந்து
நமது தவறை காண்பதே!

யாரையும்
காயப்படுத்தாத மனதில்
யாரிடமும் கோபமில்லை
யாராலும் கவலையுமில்லை!

தீயைக் கண்டு எரிந்து விடாத
மழைவெள்ளம் கண்டு ஈரமாகாத
திரை போல் நம் மனமிருந்தால்
அமைதி நிச்சயம்!

Wednesday, February 28, 2007

நினைத்து பார்க்கிறேன்


சில வருடம் முன்
ஊர் முழுக்க
மழைவெள்ளத்தால் மூழ்கிய
அந்த மாலை வேளையை!

ஸ்கூட்டரை
அந்த மழைத் தண்ணீரிலிருந்து
மீட்க முயன்று தளர்ந்து போன என்னை
மழையின் தாக்குதலிலிருந்து
காப்பாற்றின அந்த அழகு தேவதையை!

அழகிய வீட்டில் அவள் தனிமையிலா?
என்னை ஏற்கனவே இவள் அறிந்தவளா?
மனிதமிருந்தாலும் இவ்வளவு தைரியமா?
என் மீது இத்தனை கரிசனமா?
நன்றியை எப்படி சொல்வேன்?
இவள் இறைவன் அனுப்பின தேவதையா?
என்று கேட்க நினைத்த
பலநூறு கேள்விகளை!

தலை துவட்ட துண்டு
சூடான தேநீர்
என் மனம் கவர்ந்த புன்னகை
இவைகளை!

அவள் ஊமையென்றறிந்ததும்
கனத்ததுப் போன என் மனதை!

பொறியியல் வல்லுனரவள்
மேற்படிப்பிற்கு
அடுத்த விடியலில் லண்டனுக்கு
செல்லும் செய்தியை
எனக்கு சொன்ன அவளின்
அழகிய எழுத்துக்களை!

மழை நின்றதும்
எனைஅழைத்துச் செல்ல வந்த
என் தந்தையிடம் அவள் வாங்கின
ஆசீர்வாதத்தை!

ஒருவருக்கொருவர்
தொலைபேசி எண்களை
வாங்காத மறதியை!

அன்று முதல் இன்று வரை
என் மனதிலூறும் நன்றி உணர்வுகளை!

என்றாவது அந்த தேவதையை
சந்திப்பேனென்ற நம்பிக்கையை!

நினைத்து பார்க்கிறேன் - நான்
நினைத்து பார்க்கிறேன்!

என்னைப் புரிந்து கொள்


உன்னையே உனக்கு விளங்காத போது
என்னையே நீ விலக்க முயல்வது
முறையோ சொல்!

தீயில் குளித்தவன் என்னை
எரித்து விட முயலாதே!

என்னை மூழ்கடிக்க
கடல்நீரும் போதாதே!

இமயமலையுமெந்தன் உயரம்
வளரத் துடிக்கிறதே!

ஆணவமல்ல
இதெல்லாம் உண்மையே!

காதலே
இன்னுமா புரியவில்லை?

உந்தன் மனதின்
உள்ளுணர்வில்
என்றுமென்றும்
மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்வைக்கும்
வசந்தத் தென்றல்
நான்!

Tuesday, February 20, 2007

காதலியே!

சந்திரதேவதையே!
சிந்திக்க நேரமிருந்தால்-உனை
சந்தித்தும் மகிழ்ந்திருப்பேன்!

எந்தன் இயந்திர வாழ்க்கையின்
இதயத்துடிப்பை உணர்ந்துந்தன்
நினைவுகளின் தென்றலில் தான்!

ஞாபகங்கள் வெட்கப்படுகிறது
என் இதழை ஈரமாக்கின
உன் இதழ்களை நினைத்ததும்!

அழகிய பூங்காவில் நாம் !

எனது விரல்களை வரவேற்ற
மாங்கனிகளுக்கும் மயக்கம்!

முத்தமிடும் அந்த தருணங்களில்
தேனில் ஊறின கனிகளாகினோம்

நம் பாதங்களும்
முத்தமிட்டுக்கொண்டன...

பூங்காவின் சிலைகளெல்லாம்
நமது லீலைகள் கண்டு
வியந்தவைகளோ...!

விடியற்காலை
அன்று
நம்மைக் கண்டதும்
சூரிய உதயம் தாமதமென்றது!

நமது முத்த மழை கண்டு
சித்திரமாத வறுமை வானம்
அன்பளிப்பாய்
பொழிந்தன பூமழை!

நமைத்தவிர யாருமில்லா
உலகமதில் மகிழ்ந்தோம்
ஆனாலின்று
நாமிருவருமில்லா உலகத்தில்
நம்மைத் தேடுகிறது - பாவம்
காதல்!

புரியவில்லை

இதுவரையில் நானுன்னன கண்டதில்லை
என் பார்வை உனைக்காண தேடவில்லை
நம் மனங்கள் இரண்டுமென்றும் பிரிவதில்லை
நம் சந்திப்பின் தேவையென்ன புரியவில்லை !

Sunday, February 18, 2007

விமர்சனம்

எலும்பில்லாத நாக்கெதற்கு
எதை வேண்டுமென்றாலும் பேசவா?

மூவாயிரம் கோடி முதலீடு செய்த
முதலாளியின் தீர்மானங்களை
அறிய முடியா முட்டாள் சொல்கிறான்
முதலாளி முட்டாளென்று! -அந்த
குறை சொல்பவன் யாரென்று கேட்டால்
அதை ஆங்கிலத்தில் சொல்கிறான்
Trainee clerk under probation!!!

வெயிலில் விளையாடும் வீரர்களை
குளு குளு அறையிலிருந்து விமர்சனம் செய்யும்
பூப்பந்தைக் கூட தூக்க முடியா கோழைகள்!

சுதந்திரம், விமர்சனம் செய்ய அதிகாரம்,
ஜனநாயக நாட்டு மன்னர்கள், சுயகருத்துக்கள் என..
இந்த நியாயமான தலைப்புகளின் நிழல்களின் கீழ்
எத்தனை எத்தனை அநியாய விமர்சனங்கள்!!

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments