Monday, September 20, 2010

இன்னொரு மனிதன்


இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் யாரும் அனாதையல்ல!

எனது வாழ்க்கையிலும் பல வேளைகளில் அயர்வு வருவதுண்டு. ஆனால் அவைகளையெல்லாம் எனது புன்னகை மறைத்து விடும்! இந்த சிரிப்பு மட்டும் என்னிடம் இல்லை என்றால் என் மீது அனுதாபத் தீமழை பொழிந்தே இவ்வுலகம் என்னை அழித்திருக்கக்கூடும்.

எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் நான் என்றோ இறந்துபோயிருப்பேன் என்று மகாத்மா காந்தி அடிகளார் என்றோ சொன்னது எனக்கு இன்றும் பொருந்தும்!

சோர்ந்து போகும் தருணத்தில் நமக்கு தூரத்தில் ஒரு சந்தோஷத்தின் வெளிச்சம் கிடைக்கும்போது அந்த வெளிச்சத்தை காணும் வரையுமாவது மனம் அதை நோக்கி வாழக்கூடும். இன்று இந்த பூமிப்பந்தில் வாழும் 900 கோடி மக்களுடைய வாழ்க்கையும் தொடர்வது இதன் அடிப்படையில் தான் என்றால் மிகையாகாது!

இன்று மாலை ஏழு மணிக்கு ஒரு நல்ல மனிதர் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக நேற்று செய்தி வந்தது. சிறுகுழந்தையின் நாளைய பிக்னிக் பரவசம் போல் மனம் சந்தோஷமடைகிறது அந்நொடி முதல்!

அவரிடம் பேசி முடிந்ததும் என்னுடைய நல்விரும்பிகளின் பட்டியலில் அவரும் சேர்வார் என்றும் இந்த ஓர் உற்சாகம் இதிலிருந்து இன்றொன்றை நோக்கிப் பயணிக்கும் என்றும் நான் இப்போதே அறிகிறேன்.


ஆனால் எனது பிரார்த்தனனகள் எல்லாம் இப்படி நல்லதொரு தருணங்கள் எனக்கும் எல்லோருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே! இவைகள் நம்மை வாழவைக்கட்டும்!

வாழ்க்கையின் பயணங்கள் அதுவாக தீரும் வரை தொடரட்டும்!

இறைவனின் படைப்பில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கிடைத்த மிகச்சிறப்பான பரிசே!

பரிமாறிக்கொள்ள வேண்டிய மொழி - அன்பு


இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு இறைவன் தந்த பரிசு!

என் சுரேஷ் என்ற நான் உங்களுக்காக இறைவன் உங்களிடம் அளித்த பரிசு!

இந்த நாள் எல்லோருக்கும் ஓர் இனிய நாளக அமைய என் இனிய வாழ்த்துக்கள்!

அன்பு நன்றி வணக்கம்

என் சுரேஷ்

1 comment:

Anonymous said...

GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments