Tuesday, November 20, 2007

அன்பர்களே!

Wednesday, November 14, 2007

அம்மா

Tuesday, November 13, 2007

இனிய நாள்


ஜன்னலின் ஆடைகளை
நான்
விலக்கினேன்
முத்தமிட்டு சூரியகிரணங்கள்
என்னை எழுப்பியதும்!

மீண்டும் ஒரு நாள்
எனக்கு இதோ என்று
மந்தஹாசத்துடன்
பரிசளிக்கிறதே வாழ்க்கை!

ஏழ்மை ஒழிக்க
அடிமைச் சங்கிலிகள் உடைக்க
அன்பும் சமாதானமும் நிலைநாட்ட
இதோ இந்த பொடியன்
மாமலைகளோடு
பேச்சுவார்த்தைக்குத்
தயாராகிறான்!

இந்த நாளும்
இனிய நாளாக
என்னை வாழ்த்துங்கள்
அன்பு உள்ளங்களே!

பாவம் அவள்




கனகமனமொன்று உருகுகிறது
கண்மூடி கண்ணீர் உறைகிறது
முகமூடி உடைகிறது
அவள் மனதின் நிஜமுகமும் அழுகிறது!

பிள்ளைகள் நான்கிற்கு
கோலமிட்ட கணவன் மனம்
தன்னலத்தில் மகிழச்செல்ல
பிரிவின் கோபத்தில்
வாடிய மங்கையவள்
பரிவின் வறுமையாலும்
வாடியும் சுவசிக்கிறாள்!

பிளவுண்ட தன்மனதை
மறைக்க முடியா நிலையிலின்று
சிரித்து நடித்ததில் முச்சுமுட்ட
குமுறுதலில் பாவமின்று!

இறுக்கங்கள் இன்னமும் இறுக்க
உச்சத்தில் கவலைகள் திளைக்க
தெரிந்ததெல்லாம் நேர்வழியே
இன்றிவளுக்கு ஆறுதல்பெற ஏதுவழி?

உருகுமிந்த தங்கமனதிற்கு
தேவை வைத்தியமாம்
ஊர்கூடி சொல்கிறது
அவளுக்கு பைத்தியமாம்!

கண்ணீரின் விலாசம் தெரியாமல்
கண்களை இன்னமும் குருடாக்குகிறதே
கனிவற்ற இந்த கொடுமைச் சமுதாயம்!

Friday, November 9, 2007

கண்ணாடி



என்னை எனக்கு
அடையாளம் காட்டின
மனசாட்சி!

என் உணர்வுகளுக்கு
ஆறுதல் சொல்லும் தோழி!

என் காதலிக்கு
கொடுத்த முதல் முத்தத்தை
நானே காண
வெட்கத்துடன்
படமெடுத்த சூரியன்!

எனை
ரசிக்கும் நிலா!

ஒரு நாளே
எனக்கு காய்ச்சலென்றாலும் கூட
எனைக் கண்டதும்
அழுதுவிடும் நண்பன்!

ஒவ்வொரு நாளும்
என் வயதின் நாட்காட்டி!

எனை காணாமல் தவிக்கும்
காதலியின் இதயம்!

என்
நிர்வாணத்தை மட்டுமா
என் மனதின் வேதனைகளையும்
படம் பிடித்த அதிசயம் நீ!

என்னில் உனக்கும்
உன்னில் எனக்கும்
எவ்வளவு
நாகரீக
புனித
அன்பான
உறவுகள் என் கண்ணாடியே!

இருப்பினும்
நீயேனின்று
வாடிப்போனாயோ!

நான் இல்லாமல் நீயிருக்கலாம்
நீயில்லாமல் நானிருக்கலாகுமா?

இதோ உனது உடையை
உன் சம்மதத்தோடு விலக்குகிறேன்
ஆகா!
புன்னகையில்
மலர்கிறதே உன் முகம்!

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments