Friday, October 22, 2010

உருக்கம் - நடிகரின் மனதை மாற்றிய சின்னஞ்சிறுசுகள்...

Monday, September 20, 2010

நீ ஒரு காதல் சங்கீதம்...


//நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் //

காதலை சங்கீதமென்றும் அவளின் வாய்மொழி தெய்வீகமென்றும் என்ன அழகான வர்ணனை!

//வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்//

இந்த வரிகளை வாசிக்கையில் அது மும்பையில் பறக்கும் ஜோடிப்புறாக்களை நமது கண்முன்னே கொண்டு வருகிறது ஆனால் இதை எழுதின வாலி அவர்கள் அதை ஊர்வலம் போவதாக எவ்வளவு அழகாக ரசிக்கிறார் பாருங்கள்!

இதயத்தில் காதல் உணர உணர அதன் கீதம் கேட்க, ஜீவன் நனைகிறதாம் ! அதை இரவும் பகலும் ரசித்திருக்க ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதை என்ன அழகாக பாடல் வரிகளில் சித்திரம் தீட்டியிருக்கிறார் பாருங்கள் இனிய கவிஞர்!

//பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?//

நாயகன் நாயகியின் கூந்தலில் முத்தமிடும் காட்சியை ஒரு கவிஞனின் பார்வையில் எப்படி மிளிர்கிறது பாருங்கள்.

உந்தன் கூந்தலில் நான் முத்தமிட அப்போது வெளிவரும் எந்தன் காதல் மூச்சே உனக்கு பூவாக ஏன் சூட்டுகிறாய் என்ற அருமையான ஒரு உணர்ச்சிக் கேள்வி இதை ரசிக்க முடிந்தவன் காதலில் ஞானி!

//தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?//

தேன் தரும் அதிசய நிலவு நான் அவ்வளவு தான், தற்போது என்னை விட்டு விடு என்று சொன்ன பின்னர் , " எந்தன் தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்" - என்ற பயம் கலந்த ஓர் சுகமான உளவியல் கேள்வியை நாயகியின் நிலை அறிந்து கேட்கிறார், கவிஞர்!

//கடற்கரைக் காற்றே...கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே //

இனிய தென்றலே! நீ எந்தன் காதலி வருவதற்காக வழியை மட்டும் தந்தால் போதாது; நாங்கள் இருவரும் நடந்து வந்த பாதச்சுவடுகளை தயவாக நீ மறைக்காதே, ஏனெனில் அதில் எங்கள் காதல் பயணம் மீண்டும் தொடரட்டுமே என்று கவிஞர் தென்றலிடம் கெஞ்சிச் சொல்கையில் தென்றல் நம்மோடு வாழுகின்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றே தோன்றுகிறது!

இதுபோல் இனிய பயணங்கள் எல்லோருக்கும் தொடரட்டுமே....!

அன்பு நன்றி வணக்கம்

என் சுரேஷ்

இன்னொரு மனிதன்


இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் யாரும் அனாதையல்ல!

எனது வாழ்க்கையிலும் பல வேளைகளில் அயர்வு வருவதுண்டு. ஆனால் அவைகளையெல்லாம் எனது புன்னகை மறைத்து விடும்! இந்த சிரிப்பு மட்டும் என்னிடம் இல்லை என்றால் என் மீது அனுதாபத் தீமழை பொழிந்தே இவ்வுலகம் என்னை அழித்திருக்கக்கூடும்.

எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் நான் என்றோ இறந்துபோயிருப்பேன் என்று மகாத்மா காந்தி அடிகளார் என்றோ சொன்னது எனக்கு இன்றும் பொருந்தும்!

சோர்ந்து போகும் தருணத்தில் நமக்கு தூரத்தில் ஒரு சந்தோஷத்தின் வெளிச்சம் கிடைக்கும்போது அந்த வெளிச்சத்தை காணும் வரையுமாவது மனம் அதை நோக்கி வாழக்கூடும். இன்று இந்த பூமிப்பந்தில் வாழும் 900 கோடி மக்களுடைய வாழ்க்கையும் தொடர்வது இதன் அடிப்படையில் தான் என்றால் மிகையாகாது!

இன்று மாலை ஏழு மணிக்கு ஒரு நல்ல மனிதர் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக நேற்று செய்தி வந்தது. சிறுகுழந்தையின் நாளைய பிக்னிக் பரவசம் போல் மனம் சந்தோஷமடைகிறது அந்நொடி முதல்!

அவரிடம் பேசி முடிந்ததும் என்னுடைய நல்விரும்பிகளின் பட்டியலில் அவரும் சேர்வார் என்றும் இந்த ஓர் உற்சாகம் இதிலிருந்து இன்றொன்றை நோக்கிப் பயணிக்கும் என்றும் நான் இப்போதே அறிகிறேன்.


ஆனால் எனது பிரார்த்தனனகள் எல்லாம் இப்படி நல்லதொரு தருணங்கள் எனக்கும் எல்லோருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே! இவைகள் நம்மை வாழவைக்கட்டும்!

வாழ்க்கையின் பயணங்கள் அதுவாக தீரும் வரை தொடரட்டும்!

இறைவனின் படைப்பில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கிடைத்த மிகச்சிறப்பான பரிசே!

பரிமாறிக்கொள்ள வேண்டிய மொழி - அன்பு


இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு இறைவன் தந்த பரிசு!

என் சுரேஷ் என்ற நான் உங்களுக்காக இறைவன் உங்களிடம் அளித்த பரிசு!

இந்த நாள் எல்லோருக்கும் ஓர் இனிய நாளக அமைய என் இனிய வாழ்த்துக்கள்!

அன்பு நன்றி வணக்கம்

என் சுரேஷ்

Thursday, September 9, 2010

சான்றிதழ்

தூங்காத கண்கள்...

ஆசை

Thursday, September 2, 2010

ELDER BROTHER...




Dear Friends,

In this Blog for the first time I am writing in English! Why? - The above note in English is from EB! You may ask Who is this EB? I affectionately and respectfully call him as EB. (EB - Elder Brother!)

There is a greatest pleasure in introducing a nice personality to everyone and for that, language should not be a problem, isn’t it?

His (EB’s) name is Mr. Ashuthosh Ojha, The Chief Executive – Domestic Formulations of a leading Pharmaceutical Company. He has worked hard and achieved high Qualifications in Pharmaceutical and Management Studies (BITS - Pilani) and gained very rich Experiences as he officiated in major Indian Pharmaceutical Companies but very humble in nature even to a common man like me, is every one's wonder!

I know him for the last many years but seen him only once!
We used to call over phone, one another and wish during our Birthdays!

He doesn't know Tamil at all.
My Poems are being published in Tamil but still he has read most of my poems and short stories with the help of those who know Tamil! Really Great! – We Tamilians have to appreciate him isn’t it?

He is a giver! He loves giving good presentations to his friends, relatives and colleagues to their exact likings!

The problem for him with me is (It is his correct presumption hence it is a clear factual), I will not accept any present as I used to say others that the monies someone plans to spend for me to purchase a present may please be diverted to an Orphanage / Old Age Home. He used to call this as “Suresh’s Philosophy” – with a smile!

During this year's vacation also he has gone to USA and many other countries in one month's time and the very second day of his return to Chennai he has sent me a beautiful pen (Very Costly)which was well packed with a beautiful note with his handwriting (You can read that above) which was highly unexpected but greatly appreciated!

He is interestingly a very different person! Suppose if he invites a person for a Lunch or Dinner then he has the great system of sending a simple questionnaire by email and that will make his House keeper easier to prepare all the items what the Guest loves to take! It is an excellent Questionnaire I never even heard about it!

I have seen my Mother or Wife either sharing the food with the Guest what they have already cooked or used to cook what is comfortable for them. I never seen my Wife or Mother even thinking of Guest’s likings while inviting for Lunch and Dinner. Kindly don’t ask anything about me on this as I am worst than my Mother and Wife!

Now a days, it is very difficult to get a frank answers from a person of this stature but he is different!

His life is an open Diary and he doesn't have any pains or even over excitement in sharing what and all he went through and his recent video recorded while his 50th Birthday function creatively informs who were all traveled with him in his life time! – This is in fact an Honour for those!

He has great respects for his Parents. His Father is a retired Teacher and like him he is also a voracious reader! If EB asks me “Suresh, you must right now tell me what you want” – Then I will humbly say, “Dear EB, after your life time, I need all your Books!” – but who knows God’s Calling time, is another question for which no one has any answer!

I heard that in Chennai Director K.Balachandar, Actor Kamala Hasan etc are having peak level knowledge about cinema but when I met EB for the first time and when I had heard his talks about cinema and while seeing his collections ( Both Books and DVD’s in thousands!) he made me to feel that experts in this cinema field at least in India are really missing him or unfortunately not known to him! His modesty may say that it is just his hobby but it is really great!

He knew that I am an addict to Gazals (Without Wine) and whenever he gets the opportunity he will send the best Gazal collections of my dear Gazal Singer Shri. Jagajit Singh!

If you ask me to say one word about him I can surely say that he is a "Perfectionist".

I cannot think about him without a feel of goodness, respects and great wishes for him!

Hope, I can personally introduce him to all of you soon!

May God bless him and all of you!

Affectionately yours
N Suresh

Sunday, August 29, 2010

வரப்போகும் தமிழகத் தேர்தல்..... இன்றைய பார்வையில்....!


ஒவ்வொரு கட்சியும் இப்போது கூட்டம் போட்டு ஓரு பேரலை வந்தது போல் மக்களுக்கு ஒரு தோற்றத்தைத் தறக்கூடும்!

ஆனால் அந்த பேரலை ஓட்டுகளாக மாறுமா என்ற சந்தேகம் கடலுகளக்கே தெரியாத ஒன்று!

திராவிட கட்சிகளோடு ஒன்று சேராமல் எந்த கட்சிக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்த தேர்தல் நிரூபித்து விட்டது!

தற்போதைய அரசு, அடிப்படை ஏழை மக்களுக்கு இலவசங்களால் மனநிறைவு கொடுத்துள்ளது எல்லா விமர்சனங்களையும் தாண்டின ஓர் உண்மை!

ஏழை எளிய மக்கள் தான் அதிகமும் வெயிலில்/மழையில் வரிசைகளில் நின்று ஓட்டு போட முன் வருபவர்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த விஷயம்.

விமர்சன விரும்பிகளில் அதிகமும் NDTV 24 x7 - ஐ குளிர் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்!

இலவசம் பெற்று மனநிறைவு பெற்றவர்களின் ஓட்டுகள் இந்த அரசிற்கு கிடைக்க வாய்புண்டு.

இந்த அரசு இந்த முறை சொன்னதை செய்தது! சொல்லாத பல புதிய திட்டங்களையும் செயல் படுத்தி உள்ளது!

நீண்ட பட்டியல்களை எல்லோரும் எங்கும் கேட்டிருக்ககூடும் என்பதால் நான் மீண்டு அதை இங்கே பதிவு செய்யவில்லை.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் என பல இலவசங்கள்... இதையெல்லாம் ஓட்டு வாங்க என்று சொன்னாலும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்றவைகள் மக்களிடம் பெருமளவு ஆதரவை தந்துள்ளது!

கலைஞர் ஐயாவின் வயது ஒரு மாற்றத்தை கொண்டு வர மக்கள் மனதில் எண்ணம் எழுந்தாலும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளதாகத் தான் பொதுவாக சொல்லப்படுகிறது.

தனித்தனியாக கட்சிகள் களத்தில் இறங்கினால் ஓட்டுகள் சிதறி யாருக்கும் வெற்றியைத் தராது என்பதால் யார் யாரோடு இணைவார்கள் என்று தான் மக்களின் கவனம்.

மாற்றங்கள் மக்கள் விரும்பலாம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஓட்டு போட எல்லோரும் முன் வர வேண்டும்.

வெறும் 45 அல்லது 55 விழுக்காடு மட்டும் பதிவான ஓட்டுக்களை வைத்துக்கொண்டு வெற்றிகளை தீர்மானித்து ஒரு கட்சியிடம் அல்லது ஒரு கூட்டணியிடம் இதோ இந்த நாட்டை ஆண்டு கொள் என்று சொல்வது மிகவும் கவலைக்குறியது!

காங்கிரஸ் கட்சி, தமிழக ஆட்சியைப் பிடிக்க வரப்போகும் தேர்தலிலும் வாய்ப்பே இல்லை.

எந்த கட்சி/கூட்டணி தமிழகத்தை ஆண்டால் என்ன?

கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்கள் தந்த நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் காண என் போன்றோருக்கு ஆசை இல்லாமல் இல்லை!

எது நடக்க வேண்டுமோ
அது நன்றாகவே நடக்கட்டும்!

என் சுரேஷ்
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கும் உங்களில் ஒருவன்:-)

Tuesday, August 24, 2010

அந்தோணி முத்துவை சொர்கத்தில் சந்திப்போம்...



அந்தோணி முத்து!

25 வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக அந்தோணி என்ற ஒருவர் இருப்பதாக (அழகி தமிழ் - பா விஸ்வாநாதன் மூலம்) அறிந்ததும் எனது ஆசிரியர் மைக்கல்ராஜ், தாயார் திருமதி சுமதி மைக்கல்ராஜ், மற்றும் எனது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி சுரேஷ் - நாங்கள் மூவரும் அவரைக் காண ரெட் ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று நேரடியாக கண்டு வந்தோம்.

"யாரிவர் " என்ற கவிதை ஒன்றை எழுதி வலைப்பதிவு நண்பர்களிடம் அந்தோணி முத்துவைப் பற்றி அறிவித்தேன். அவரின் நிலைப் பற்றி நான் அனுப்பின புகைப்படங்களும் சொல்ல முடியாத செய்திகளை அறிவித்தன!

வலைப்பதிவாளர்கள், அழகி தமிழ்- பா விஸ்வநாதன், சிங்கப்பூர் அன்பு, சீனா ஐயா, சக்தி ஐயா, ஆல்பர்ட் அண்ணன், என்றென்றும் அன்புடன் பாலா, ஹரன் (துபாய்) என பலநூறு பேர்கள் என்றென்றும் பாலாவின் வங்கி வழியாகவும் பிறகு அந்தோணிக்கு நேரடியாகவும் உதவி செய்தனர். (எனது மனநிலை கவலையால் இருப்பதால் பலருடைய பெயர்கள் விட்டுப்போய் விட்டது, தயவாக மன்னிக்கவும்)

தேவையான மடிகணினி, இயந்திர நாற்காலி என அடிப்படை தேவைகள் முடிந்த அளவு வலைதள நண்பர்களும் மற்ற பல அன்புள்ளங்களம் அளித்து அந்தோணி சந்தோஷமாக இருந்தார்.

இருள் நிறைந்த அறை விட்டு இயந்திர நாற்காலியில் தானே வெளியேச் சென்று தினமும் சூரியனைக் கண்டு வரும் மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷ வார்த்தைகள் மறக்க முடியாதவை!

என்னை மகனாக நேசிக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எனக்கு ஒரு மடல் எழுதி ( அப்போது அவர் துபாயில் இருந்தார்) திரு. வி.கெ.டி பாலன் ஐயாவை தொடர்பு செய்யச் சொன்னர். செய்தேன்!

திரு.வி.கே.டி. பாலன் ஐயா அவர் மக்கள் தொலைக்காட்சியில் அந்தோணி முத்துவை நேர்காணல் செய்து இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி அந்தோணி, அந்தோணியின் வீட்டிலிருந்து கொண்டே ஒரு வேலை செய்யும் சௌகரியத்தையும் செய்து கொடுத்து மதுரா க்ரூப் என்ற அவருடைய நிறுவனத்திலிருந்து அன்று முதல் தனது சிறப்பான ஓர் தொழிலாளியாக நியமித்து கௌரவித்தார்

இந்நேரத்தில் திரு அப்துல் ஜப்பார் ஐயாவையும் திரு வி.கே.டி பாலன் ஐயாவையும் நன்றியோடு வணங்குகிறேன்!

ஏறத்தாழ எல்லா நாளேடுகளும், வார இதழ்களும் அந்தோணியின் நேர்காணலை பதிவு செய்தது.

இணயதளத்தோடு அல்ல, தமிழோடு இணையதளத்தை தொடர்பு கொண்ட பிற்கு, அந்தோணிக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் மிக மிக சந்தோஷமாக இருந்தது.

எனக்கு நேரம் இல்லாத தவிக்கும் போதெல்லாம் வலைப்பதிவாளர் திருமதி அருணா அவர்களோடு அந்தோணியிடம் பேச சொல்வேன். அவர்கள் முடிந்த போதெல்லாம்
பேசி வந்தார். திருமதி அருணா அப்படி ஒரு தாயன்பு கொண்டவர்!


கழுத்திற்கு கீழ் இரண்டு கைகளைத் தவிற எல்லாம் வேலை செய்யாத போதும் உழைத்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த அந்தோணி முத்து கடந்த ஓரிரு மாதங்களாக எப்போதும் ஏற்படும் மூச்சுத் திணறல் ( வீசிங்க் ) காரணமாக கஷ்ட்டப்பட்டு வந்தார். குடும்பத்தாரோடு சேர்ந்து நாங்களும் இது எப்போதும் போல் சரியாகி விடும் என்று நினைத்தோம்.

அந்தோணி அதிகமாக கஷ்ட்டப்படுவதைக் கண்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படு அவருக்கு தீவிர சிகிட்சை அளித்து வந்த போதும் நிர்பந்தமாக அவர் தனது இல்லத்தின் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் தன்னை கொண்ட செல்ல அடம் பிடித்த போது வேறுவழியின்றி அவருடைய குடும்பத்தர் அதற்கு சம்மதித்தனர்.

விஷயம் தெரிந்ததும் திரு பாலன் ஐயாவோடு தொடர்பு கொண்டேன். அத்தனை மருத்தவ தகவல்களை அவரிடம் சேர்க்க ஏற்பாடு செய்யச் சொன்னார், செய்தேன்.

எனது தற்போதைய வேலை அழுத்தம் காரணமாக அந்தோணியை மருத்துவமனை சென்று காண முடியவில்லை என்ற குற்ற உணர்வு என்னை கொன்று கொண்டிருந்தது. இருப்பினும் என்னால் முடிந்தவைகளை எல்லாம் தொலைபேசி வழி செய்து வந்தேன்.

அந்தோணி முத்துவின் சகோதரிகளில் ஒருவர் (திருச்சபை கன்னியஸ்த்ரி) அவர்களின் பரிந்துரையின் பேரில் நேற்று காலை இசபெல்லா மருத்துவமனைக்கு அந்தோணியை மாற்ற தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யும் நேரம் இதற்குமேல் அந்தோணி கஷட்டப்பட வேண்டாம் என்று அவரின் அழகிய உயிர் மலரை இறைவன் இந்த புமியின் மனிதத்தோட்டங்களிலிருந்து எடுத்துக்கொண்டார்.

ஆரம்பம் முதல் நேற்று வரை அந்தோணியை நேரடியாக சந்தித்தோர், உதவி செய்தோர் என எல்லோருக்கும் எனது நன்றிகளை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.

நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கத் தான் இறைவன் அந்தோணி முத்துவைப் போன்றோரை படைக்கிறார் என்றும் இதுபோன்று கஷ்ட்டப்படுபவர்கள் அதிக காலம் வாழ்வதில்லை என்றும் என் மனது சொன்னது!

அந்தோணி இனி இங்கு இல்லை என்ற விஷயம் தெரிந்ததும், திரு பாலன் ஐயா, " சுரேஷ், அந்தோணியின் வலியும் கஷ்ட்டமும் அவருக்கு மட்டுமே தெரியும். இறைவன் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக் செய்வார், நீங்கள் தயவாக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருங்கள்" என்று மிக மிக உறுதியோடு என் இதயத்தில் பதிவு செய்தார்.

என்னை தொடர்பு கொண்ட பலருக்கும் பாலன் ஐயா சொன்ன அதே வாசகத்தை சொல்லிக்கொண்டே என்னை ஆறுதல் செய்தேன்

இன்று மீண்டும் அந்தோணியின் வலைதளத்தை பார்த்தேன்.

இந்த பதிவு எழுதும் நேரம் தற்போது அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கிறது!
இதை வாசித்து ஒரு நொடி நீங்கள் கண்களளை மூடி அந்தோணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய அன்போடு அழைக்கிறேன்!

இனி என்று?

இன்றாவது அந்தோணியின் வலைப்பூவை வாசியுங்கள். மரணம் ஒருவனின் எழுத்தை கோபுரத்திற்கு கொண்டு போகும். அந்தோணி உயிருடன் தற்போது இல்லை என்றாலும், அந்தோணி முத்து என்ற அவருடைய பெயர் கோபுரத்தில் எழுதப்படட்டும் உங்களால்!

அவரின் வலைப்பூ http://positiveanthonytamil.blogspot.com/2008/03/blog-post_23.html

என்றென்றும் அன்புடன்
என் சுரேஷ்

பின் குறிப்பு: நான் ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய ஆர்ம்பிக்கும்போதும் அதை ஒரு ப்ராஜக்ட் என்பேன். முடிந்ததும் ப்ராஜக்ட் ஓவர் என்பேன். ஆனால் அந்தோணியின் ப்ராஜக்ட் தீரவில்லை, அதை இறைவனின் பாதத்தில் தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். மரணத்திற்கு பிறகு ஆத்மா இறைவனிடம் செல்லும் என்பது உண்மையெனில் எனக்கு இனி அந்தோணியைப் பற்றி கவலையில்லை!

அந்தோணியை நாம் சொர்கத்தில் சந்திப்போம்!

Thursday, August 19, 2010

வழக்கறிஞர் தீபிகாவிற்கு திறந்த ஒரு மடல்...

அன்பினிய என் தங்கை திருமதி தீபிகா அவர்களுக்கு,

இன்று உங்கள் பிறந்த நாள் என்று என்றோ அறிந்து வைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம் இன்று!

மீண்டும் உங்களுக்கான எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இந்த மடல் வழியாக தெரிவித்து மகிழ்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்த சமாதானமும் தரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

2010 -ல் இறைவன் எனக்கு அளித்த பல முக்கிய பரிசுகளில் தங்கை தீபிகா, நீங்கள் முக்கியமான ஒன்று!

துடிப்பும் தெளிவும் நிறைந்த அறிவாற்றல் நிறைந்த பேச்சு, கடின உழைப்பு, கடந்து வந்த பாதைகளை மறவாமால் அடுத்தவர்களுக்கு உதவும் அன்புள்ளம், நகைச்சுவை உணர்வு, தைரியம் என நீண்டதொரு சிறப்பு பட்டியலுக்கு சொந்தக்காரி நீங்கள் என்றும் இந்த பூமிக்கு ஒரு முக்கிய சொத்து என்றால் அது மிகையாகாது!

இப்படித் தான் வழக்கறிஞர்கள் என்ற சாதாரண மனிதனின் புரிதல்களுக்கு வியப்பளிக்கிறது உங்களுடைய சேவைகள்.

ஏழ்மை தந்த பசி அறிந்த ஒருவருக்கே இன்னொருவரின் பசி கண்டு உதவ முன் வர முடியும்.
அந்த வகையில் நீங்கள் பலருக்கு செய்து வரும் உதவிகளைக் கண்டு பாராட்டாமல் இருக்க முடியுமா?

மாநாகராட்சி பள்ளிகளில் படிக்கும் எங்கள் சமுதாயத்தின் (ஏழை எளிய) பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கும் முதல் வழக்கறிஞரை நான் உங்களில் தான் வியப்போடு பார்க்கிறேன், பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன், ஆகையால் பாராட்டுகிறேன்!

பணம் பணம் பணம் என்ற ஒற்றை விஷத்திற்கு மட்டுமே பின்னர்/ முன்னர் போகும் இந்த சமுதாயத்தில், உணவில் உப்பைப் போன்று மட்டுமே பணம் போதும்; உப்பே உணவாக்கும் கொடுமை நமக்கெதற்கு என்ற கருத்தை நடைமுறை படுத்தும் உங்கள் வாழ்க்கை முறையும் சிறப்பானதே!

திரு பார்வேந்தன் அவர்களை நான் சந்திக்க நீங்கள் எடுத்த முயற்சி, அதில் எனது சந்தோஷம் கண்டு உங்களின் மகிழ்ச்சி - இதை எந்நாளும் நான் நன்றியோடு நினைத்துப்பார்ப்பேன்!

நாம் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேச இந்த காலம் நமக்கு துணைவருவதில்லை என்பது கசப்பான ஓர் உண்மை தான்!
இருப்பினும் முயற்சி செய்வோம்.

இதுவரை நீங்கள் சந்தித்த வழக்குகளில் மறக்க முடியாதவைகள் யாது என்றெல்லாம் உங்களிடமிருந்தும் கேட்டறிந்து இன்னமும் கொஞ்சம் ஆழமான எனது சமுதாய தரிசனங்களுக்கு உங்கள் கருத்துக்கள் எனக்கு உதவிட காலம் கனியட்டும்!

என் தம்பிகள் சுரேஷ், முத்து, மற்றும் தங்கை மேகலா போன்றோர்களுக்கு வேலைகள் கொடுத்து, அவர்களில் நீங்கள் காட்டும் அன்பும் நலனும் கண்டிப்பும் கண்டு சந்தோஷப்படுகிறேன்.

உங்களினிய குடும்பத்தார் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்!

உங்களுக்கு நிச்சயம் நல்ல ஒரு எதிர்காலம் இறைவன் அளிப்பார் என்ற நம்பிக்கையில் மீண்டும் வாழ்த்துகிறேன் தங்கையே! நீங்கள் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்

என்றென்றும் பேரன்புடன்
உங்கள் அன்பு அண்ணன்
என் சுரேஷ்

Tuesday, August 10, 2010

அன்பின் உலகம்...

வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல
புரட்சியில் வெற்றி காண வேண்டியவை!
ஆனால்…

அதே புரட்சி வார்த்தைகளால்
நாடுகள் பல விடுதலை அடைந்தும்
சுதந்திரம்
அடுத்த அதிகாரத்திற்கு
அடிமையாகிறதே!

தங்களின் கூர்மை தந்தங்களை மறந்து போய்
மரத்தடிகளை சுமக்கும் யானைகள் கூட
மனித அடிமைகளைக் கண்டு
கவலைப்படுவதுண்டு
பரிகசிப்பதுமுண்டு!

இது தான் சம்பளம்
பிடிக்கவில்லை எனில் வெளியே போ - என
கர்ஜிக்கும் அக்னி வார்த்தைகளால்
கவலையில் எரிகிறது
ஏழை அடிமைகளின்
வயிறும் சுயமரியாதையும் அடுப்பும்!

இன்னமும் உலகில்
எத்தனை கோடி அடிமைகள்!
அழுது தீர்க்க வேண்டியவைகள் தானா
ஏழைகளின் ஆயுட்காலம் ?

தவறுகளை தவறாமல் நியாயப்படுத்தி
ஏழ்மைக்கு மீண்டும்
ஏழ்மை கொடுத்து அடிமைப்படுத்தி
மகிழும் அதிகார துரோகிகள்
தங்கள் தவறுகளை உணரும் நேரம்-வாழ்க்கை
கடலைக் கடந்த மீனாகத்
துடிக்குமென்பதை அறியாதவர்கள்!

தெயவமாக வேண்டாம்
மிருகமென்று சொல்லி
மிருகங்களையும்
அவமானப்படுத்த வேண்டாம்
மனிதா! நீ மனிதனாக இரு!

காலம் இன்னமும் காத்திருக்கிறது
அமைதியும் சுதந்திரமும் நிறைந்த
அன்பின் உலகம் கண்டு மகிழ!

Friday, August 6, 2010

K ஜான்...

திரு. K. ஜான் என்பவர், Haemophilia என்ற நோயால் கஷ்ட்டப்படுகிறார்.

இரத்தத்தில் K- பேக்டரின் குறைவு தான் இந்த நோய்க்கு காரணம்.

உடலில் அடிபட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டால் என்னதான் கட்டு போட்டாலும் இரத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள "Factor 8" என்ற ஊசி போட்டால் மட்டுமே இரத்தக் கசிவு நிற்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன பலரின் சொத்துக்கள்/ நண்கொடைகள் வைத்துக்கொண்டு Haemophilia Society என்ற ஓர் அமைப்பு ஜான் போன்றோருக்கு ரூபாய் மூவாயிரம் ரூபாய்க்கு இந்த ஊசி குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் சென்னை அலுவலகம், தரமணியில் உள்ள VHS மருத்துவமனையில் உள்ளது.

என்ன தான் ஏழ்மையில் வாடினாலும் தன்னிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் எப்போதும் ஜான் வைப்பது வழக்கம். அவ்வப்போது ஆபத்து வரும் வேளைகளில் அந்தப் பணம் கொண்டு ஊசிபோட்டு இரத்தக் கசிவை நிற்க வைப்பது பல காலங்களாக நடந்து வருகின்ற ஒன்று. தொடர்ந்து சிறிய சம்பளத்தில் பல காலங்களாக வேலையும் செய்து வந்தார், அவருடைய தற்போதைய வயது 43. படிப்பு 12 ஆம் வகுப்பு வரை!

அண்மையில் ஓர் விபத்தில் சிக்கிக்கொண்ட ஜானிற்கு இடுப்பு, கால்கள் என பல இடங்களில் இரத்தம் கட்டிக்கொண்டு VHS மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. Haemophilia Society மூலமாக இவருக்கு பலமுறை ஊசிகள் குறைந்த விலையில் (மூவாயிரம் ரூபாய்க்கு) கொடுக்கப்பட்டது.

மொத்தச் செலவு 12000 ரூபாய்க்கு மேலாயிற்று. தன்னிடம் இருந்த 2000 ரூபாய் அடைத்து விட்டு, பாக்கி மாதாமாதம் கட்டிக்கொள்கிறேன் என்ற ஜானின் விண்ணப்பத்தின் அடிப்படையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று அங்கிருந்து மருந்தோடு ஓய்வும் எடுத்து வருகிறார். ஆனால் மருந்திற்கும் குடும்பச்செலவிற்கும் பொருளாதாரம் போதவில்லை.

இவருக்கு தற்போது வேலையும் இல்லை என்பது இன்னொரு கவலை. அப்படியே வேலை கிடைத்தாலும் உடனடியாக அவர் வேலைக்கு செல்ல இயலாத நிலை. கைத்தடி வைத்துத் தான் அவருக்கு தற்போது நடக்க முடிகிறது.

இவரின் மனைவி, சாதாரண பள்ளி ஒன்றில் ஆசிரியை. அந்த குறைந்த வருமானத்தில், வாடகையும் கொடுத்து, தங்களின் மகளை பன்னிரண்டாவது படிக்க வைத்து வாழ இந்த குடும்பம் மிகவும் கஷ்ட்டப்படுகிறது.

நோயும், வறுமையும் ஒன்று கூடினால், கொடுமை தான்!

இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதை அல்ல!

நேரடியாக ஜானை சந்திக்க விரும்புவோர் அவரை அவரது இல்லத்தில் சந்திக்கலாம். அவருடைய விலாசம்:

கெ. ஜான்
54/43, வெங்கடபத்தன் தெரு
புரசைவாக்கம், சென்னை -7

பேசி ஆறுதல் கூற நினைப்பவர்கள் அவரை 9840910567 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அவருக்கு பொருளாதார உதவி செய்ய விரும்புவோருக்கு அவருடைய வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள்:

K John
Catholic Syrian Bank
Annanagar Branch, Chennai 600 102
Savings Bank Account Number 20070619
IFSC Code Number: CSBK0000320
குறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.


மருத்துவச் செலவிற்கு நேரடியாக Haemophilia Society -க்கு பணம் அனுப்பி உதவ நினைப்பவர்களுக்கு தேவையான தகவல்கள்:

Haemophilia Society - Madras Chapter
Indian Overseas Bank
VHS Branch ( Branch Code 1744)
SB Account No.174401000000903
IFSC Code Number :IOBA0001744

குறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.
Heamophilia Society Contact Persons: Mr.Parthasarathy or/ and Mr.Vydyanathan
Address: Heamophilia Society- Madras Chapter, VHS Hospital Campus, Taramani,
Phone Number 22541652 / 9444014281


"அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,.."



அன்புடன்
என் சுரேஷ்

Monday, July 26, 2010

ReviewStream.com - பதிவு செய்த விமர்சனம்

Ennangalin Oorvalam Tamil book is a book that contains collection of poetry wrote by the authour N.Suresh. I am always interested in reading poetry books especially in my mother tongue Tamil. This book is full of poetry in different things like love, life, country, sky, sea, women, people, politics, etc. This book
also contains photographs that related to the poetry concept. That adds more colorful to the poetry. This book really impresses me a lot. I love the title too. It explained the power of the authour’s thoughts. The authour was done a great job. His thinking and thoughts are very high. He impresses in all his poets even though all are different topics. His thoughts are very deepen. ‘Thirumagal Nilayam, Chennai’, publishes this book. This book contains 103 pages and the cost of this book is only Rs.60/-. This is definitely a fantastic book.

Monday, March 8, 2010

மகளிர் தினம்...

அன்பினிய சகோதரியே

இன்று மகளிர் தினம்.
என் இனிய வாழ்த்துக்கள்!

ஆண்களுக்கு நிகர் பெண்கள்
என்பதை விட
பெண்களே சிறந்தவர்கள் -என
புரிதிலில் உறுதி பெற்ற எனது
பிரார்த்தனைகள் தொடர்கிறது
"மகளிர் தினம்" - என்ற
கொண்டாட்டங்கள்
இனிமேலும் வேண்டாமென்று...!

உங்களை நான்
அதிகமாக நேசிக்கிறேன்
இதை உணர்த்த இந்நாள் உதவிற்று
இறைவனுக்கு நன்றி....!

பாசமுடன் உங்கள் சகோதரன்
என் சுரேஷ்

Thursday, February 18, 2010

உறவுகள் தொடர்ந்திடும்...

பூங்காவில்...

Friday, January 29, 2010

திருமதி மாலாவிற்கு ஒரு திறந்த கடிதம்

அன்புள்ள திருமதி மாலா,

"இன்றைய தமிழகம்" என்ற தலைப்பில் பெயர் சொல்லாத ஒரு நபரின் கட்டுரை உங்கள் கணினியில் கண்டதும் அதை எனக்கு அனுப்பின உங்கள் அன்புள்ளத்திற்கு நன்றி.

எனது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

இலவசங்களை மக்களுக்கு கொடுப்பதால் இந்த சமூகம் நாசமாக போய்விடும் என்ற கருத்தைக்கொண்டு இந்த கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இன்றைக்கு ஒரு கிலோ அரிசிக்கு 28 முதல் 45 வரை விலை ஏறியுள்ளது. ரேஷன் அரிசியை மட்டுமமே நம்பி உள்ள மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்துள்ளதால் இன்று பட்டினி மரணங்கள் இல்லாமல் போனது என்பதை மறுக்க முடியுமா?

கணினி முன் அமர்ந்து உலகத்தை பார்க்கும் நமது எழுத்தாளர்கள் வறுமையின் மேகத்தில் மூழ்கின சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று பார்த்தால் உண்மை விளங்கும்.

வண்ணத்தொலைக்காட்சி என்றால் என்ன என்றே தெரியாதோர் இந்த தமிழ் நாட்டிலேயே எத்தனையோ லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால, அதன் எண்ணிக்கையை அறிந்தால் யாரும் அதிர்ச்சி அடைவார்கள்.

பொழுதுபோக்கு என்பது வறுமையால் பாதித்தவர்களுக்கு வேண்டாம் என்றால் எப்படி? அவர்களும் இந்த உலகம் என்னவென்று அறியட்டும். இதன் அடிப்படையில் தான் வண்ணத்தொலைக்காட்சி கொடுத்துள்ளது இந்த அரசு.

இன்றும் முன்னால் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்து வருகிறார் என்று என்னிடம் சொன்ன வயதானவர்கள் என் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றனர்.

மருத்துவக்காப்பீடு என்ற ஒரு விஷயத்தை காப்பீடு நிறுவனங்கள் இதுவரை பெரிய அளவில் எல்லோருக்கும் சென்றடையும் படி பரப்புரை செய்யவில்லை என்பது சத்தியம். அடிப்படை ஏழைக்கும் மாரடைப்பு போன்ற ஆபத்தான் நோயகள் வரலாம். அப்போது அவர்கள் என்ன தான் செய்வார்கள்?

ஒன்று உயர்ந்த வட்டிக்கு கடன் வாங்குவார்கள், அல்லது இருக்கும் சொத்தை விப்பார்கள் அல்லது மரணப்படுவார்கள். ஆனால் தற்போது மக்களுக்கு அரசு அளித்துள்ள மருத்துவக்காப்பீடு திட்டத்தால் பலகோடி தமிழ்மக்கள் பயன்படுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்ன்ர் இதே திட்டத்தை திரு ஒபாமா, அமெரிக்காவில் ஆரம்பித்துள்ளார் என்பதை மிகவும் சௌகரியமாக பலர் மறந்து விட்டது வருத்தத்திற்குறியது.

தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டுவருகின்ற எல்லா திட்டங்களையும் மத்திய அரசும் மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் திமுக கழகத்தின் உரிப்பினரல்ல; ஆனால் பசி என்றால் என்ன என்று அறிந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு பயன்கள் பல கிடைத்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் தமிழகத்தின் வளர்ச்சி கண்டு உலகமே வியக்கும்போது நான் அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியுமா?

இதெல்லாம் ஓட்டு வாங்கத்தான் இந்த அரசு செய்கிறது என்று வாதாடுவோரிடம், அதில் தவறென்ன என்று கேட்காமலும் இருக்க இயலவில்லை.

வேலையில்லா கொடுமை தீர்க்க அரசு வேலைவாய்பு நிச்சயப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் ஏழைப்பெண்கள் பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமான உணவு மற்றும் மருந்தில்லாமல் இறந்தே போகும் கொடுமை ஒழிக்கத்தான் பிரசவம் முடிந்த தாய்மார்களுக்கு இந்த அரசு பணம் கொடுத்து உதவுகிறது.

உணவு இல்லை என்பதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு கொடுப்பது நிச்சயம் பாராட்ட வேண்டின ஒன்று. இது காமராஜர் ஐயாவின் காலம் முதல் தொடர்ந்து செய்து வருகின்ற அரசின் சேவை!

ஏழைகளுக்கு இலவச புத்தகம், படிப்பு, சீறுடை, சைக்கில், பஸ் பாஸ் இவைகள் கொடுப்பதில் தவறென்ன? ஏழ்மையால் கல்வி கற்க ஏற்படும் தடைகளை தவிற்க வேரென்ன வழி?

பெண் பருவமடைந்தால் அதை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டின வறுமைநிலை ஏழைகளுக்கு வேண்டாமென்ற நல்லெண்ணத்தால் தான் அரசு 2500 ரூபாய் ஏழைகளுக்கு கொடுத்து வருகிறது. ஏழைகளுக்கும் உணர்வுகளுண்டு. ஏழை வீட்டு பிள்ளைகளுக்கும் மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டும். இது தமிழர்களின் மரபு. ஏழைப்பெண்களின் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்றால் அந்த கவலையின் நிலையை அறிய சில காலம் கிராமத்தில் வாழ்ந்தால் யாருக்கும் உணரமுடியும்.

ஒரு கிராம் தாலி கூட இல்லை என்பதால் திருமணங்கள் பல நடக்காமலே போகின்றன. ஏழைகளுக்கு ஒரு பவன் தாலி கொடுத்து திருமண உதவி செய்து கொடுக்க அரசு முன்வந்ததை பாராட்ட ஏழ்மையின் வலி அறிந்திருக்க வேண்டும், மற்றபடி பாராட்ட வேறெந்த தகுதியும் தேவையில்லை.

இலவசத்தை கைய்யூட்டு என்றும் பிச்சையென்றும் கொச்சைப்படுத்துவது மாபெரும்
தவறு. ஏழ்மையிலிருந்து மேல்வர இருக்கும் சமுதாயத்திற்கு ஓர் நல்ல அரசு செய்ய வேண்டின கடமையைத் தான் இந்த அரசு செய்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலவசம் தவறு என்று போதனை செய்வோர் எத்தனை பேர் தன்னிடம் இருக்கும் சொகுசுக்களை ஏழைகளோடு பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள்?

இலவசம் தேவை இல்லை என்றால் இத்தனை இலவசங்களை பெற மக்கள் முன் வருவார்களா? இத்தனை திட்டங்கள் தான் வெற்றிபெற்றிருக்குமா?

"எதையும் எதிர்போம்" - கொள்கையாளர்கள் மீது பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய இயலும்?

புதிய சட்டப்பேரவை கட்டிடம், சிறந்த நூலகம், தேவைக்கேற்ப பாலங்கள்,
நிலமில்லாதவர்களுக்கு நிலம், ஏழைகளுக்கு மேல் குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத
சலுகைகள், கடன் ரத்து என நீண்டு கொண்டே போகும் இந்த
நற்பணிகள், ஐந்தாண்டுகளுக்கு முன்னமே சாதனையாக செய்து முடிக்கும் நேரமிதில்
முதலமைச்சரை மட்டுமல்ல, அவரோடு பணிபுரியும் மந்திரிகள், அரசு அலுவலர்கள் என ஒட்டு மொத்தமாக இந்த தமிழக அரசையே பாராட்டும் ஓர் நல்ல மனம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை, பிரார்த்தனை!

இறைவன் நல்லவர், நல்லவர்களான தமிழர்களுக்கு இந்த உண்மையின் அழகை அவர் வெளிச்சமிட்டு காட்டுவார் என்று நான் நம்புகிறேன்.


பாசமுடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments