Saturday, May 24, 2008

இன்று போய் நாளை வாராய்!

அன்று மாலையும் கர்ணன் தானதர்மங்கள் செய்வதற்காக பொருட்கள், பெற்காசுகள், பணம் இவைகள் யாவும் எடுத்துக் கொண்டு அவரது மாளிகையின் வாசலில் அமர்ந்திருந்தார். பலர் வந்தார்கள். அன்போடு எல்லோருக்கும் தானதர்மங்கள் செய்தாயிற்று. மாலை இரவாக மலரும் நேரம், ஓர் ஏழைப் பெரியவர் வந்தார். கர்ணன் அந்தப் பெரியவரிடம் அன்போடு வணக்கம் சொல்லி சுற்றி முற்றிப் பார்த்தார் ஆனனல் ஒன்றும் கொடுக்க இல்லாத நிலை. தான் அமர்ந்திருந்த இருக்கையின் இடது பாகத்தில் இருந்த பெரிய ஒரு அழகான தங்க விளக்கு அவரின் கண்களில் பட்டதும் கர்ணன் தனது இடது கைய்யாலையே அதை எடுத்து, இடது கையாலையே அந்த ஏழைக்கு புன்னகையோடு கொடுத்தார். நன்றி சொல்லிவிட்டு அந்த ஏழை, தங்க விளக்கை சந்தோஷமுடன் எடுத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள்..." ஐயா இடது கையால் தானம் செய்வது சரியா" என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

அதற்கு கர்ணன், " மன்னிக்கவும், இடது கையிலிருந்து வலது கைக்கு அந்த தங்க விளக்கு மாறும் வேளையில் எனது மனம் மாறிவிடுமோ என்ற எண்ணத்தில் தான் இடது கையிலேயே அதை கொடுத்து விட்டேன்" என்றார்.

நல்ல செயல்களை செய்ய நேரம் பார்க்க தேவையில்லை என்பதை பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் செய்ய வேண்டிய நல்ல செயல்களை நாளை பார்க்கலாம் என்று தள்ளிப்போடாமல் அதை உடனடியாக செய்வதே நன்று. உலகத்தின் கடைசி நாள் ஒருவேளை இன்றே இருக்கக்கூடும் என்ற ஒரு மனோபாவத்தில் நல்ல செயல்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்வது நிச்சயமாக வெற்றியான, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை நமக்கு அன்பளிப்பாய் தரும் என்பது நிச்சயம்.

இப்படி ஒரு பெரியவர் தனது சொற்பொழிவொன்றில் பேசியதை நான் இங்கே பதிவு செய்கிறேன், அவ்வளவு தான்!

அதனால் எப்போது கர்ணன் இதைச் செய்தார், மகாபாரதத்தில்/கம்பராமாயணத்தில் இதில் எந்த பாடலில் வருகிறது என்றெல்லாம் கேட்டு என்னை யாரும் சிநேகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்:-)

என் சுரேஷ்

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments