Wednesday, April 2, 2008

காதலாகவே காதல்!



நம் கவிஞர் என் சுரேஷ் அவர்கள் அவரது புகழுக்கு அணிசேர்க்கும் வகையில் பல நூல்களுக்கு தாயானவர். அவரது முந்தைய நூல்களிலெல்லாம் தனிமனித பார்வையில் அன்பு, பாசம், கருணை, பரிவு, இறக்கம் போன்ற குணங்களைப் பற்றியும், சமூக பார்வையில் நியாயம், தர்மம், வறுமை, அமைதி, மானுடம், அகிம்சை, வன்செயல் போன்றவைகள் பற்றியே அதிகமாக எழுதியிருந்தாலும், தற்போது புதுமுயற்சியாக காதலைப் பற்றியும் எழுதியுள்ளார்.

காதலைப் பாடாத கவிஞனே இல்லை. காதலில்லாத உலகுமில்லை; உயிருமில்லை. காதல் வேண்டாத பொருளென்பதுமில்லை. நாமும் பாடிப்பார்த்து விடுவோமென்று துணிந்து விட்ட கவிஞர் என். சுரேஷ், காதலுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், சிற்றின்ப இச்சை கலவாமல் கொச்சையாகவே காதல் என்பதை திருத்தி " காதலாகவே காதல்..." எனும் இந்நூலை வடித்துள்ளார்.

ஓர் ஆண்மகனுக்கு காதல் எவ்வாறு ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தி, உறுதுணையாக இருக்கிறதென்பதையும், பிறருக்காய் தம்மை அற்பணித்துக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் பரிபூரண காதலால் ஏற்படும் மன அமைதியையும் - அதன் இனிமையையும் தானே உணர்ந்தவாறு எழுதியுள்ளார் கவிஞர் என்.சுரேஷ்.

வாலிபர்களும், வாலிபத்தைத் தாண்டி குதித்தவர்களும் மட்டுமே படிக்க வேண்டிய நூல் என்று இல்லாமல், அன்பின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கண்ணுற வேண்டிய நூல் இது.

கவிஞர் என்.சுரேஷ் தனது முயற்சியில் சிறப்படையவும் அவரது பேனாநுனி சுடர் விடவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

கே. இராஜேந்திரன்
சென்னை

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments