Tuesday, August 14, 2007

ரோஜா ரோஜா....

ஒரே நாளில்
வாடினால் என்ன!
நான்
ரோஜாவாகவே
பிறந்திருக்கலாம்
உன்னோடு வாழ!

விடிந்த பிறகும்
மறைந்து போகாமல்
தவமிருக்கும் நிலாவிற்கு
நம்மீது இவ்வளவு
பிரியமா!

உணர்வுகள் நிறைந்த - உன்
ஒற்றைப்பார்வை சொன்னது
சொல்லத்துடிக்குமுன்
காதல்..
உனக்காகவே பிறந்தவன்
நானேயென்று
உணர்ந்தேனின்று!

எனக்கு ரோஜா பிடிக்குமென்பதால்
நீ இப்போதெல்லாம்
குளிதண்ணீரிலென் நினைவுகளாய்
ரோஜா இதழ்களை
தூவித் தான்
குளிக்கச் செல்கிறாய்....
ஒவ்வொரு இதழும் என் இதழ்களாய்
நீ மகிழ்ந்து சுகித்திட!

ரோஜாவை சிநேகித்த நான்
உன்னைக் கண்ட
பிறகுதான் உணர்ந்தேன்
ரோஜாவை விட அழகானவள்
நீயொருவள் மட்டும் தானென்று

நான்
சிநேகிப்பதும்
காதலிப்பதும்
காதலியின் பெயரும்
கொடுத்த முதல் பரிசும்
கிடைத்த முதல் பரிசும்
இறுதிப்படுக்கையில் காத்திருப்பதும்
ரோஜா ரோஜா ரோஜாவே !

மறக்க முடியுமா இந்த இடம்
நாம் முதன்முதலாய் சந்தித்த சொர்கம்!
நீ முத்தமிட ஓடி வந்ததும்
வெட்கத்திலன்று கண்மூடின
செடிகளும் மரங்களும்
இன்றும் நமை நினைத்தாலே
பெருமகிழ்ச்சியில் பெருமிதமடைகிறதே!

என் காதலுக்கு நீ
சம்மதம் தெரிவித்ததால்
நான் மனநல மருத்துவரானேன்!
நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்
இதோ எந்தன் தோட்டத்து
ரோஜாப்பூக்கள்...

காதலின் பாலைவனத்தில்
நான்!
நிலாவாக நீ
என்னைக்காண ரோஜாயேந்தி
நடந்து வர.. வர..
பாலைவனம் நந்தவனமாகிறது...!

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments