Thursday, July 19, 2007

தெளிவான நம்பிக்கை!





நானுனைத் தேடும் வேளைகளில் நீயோ
நீயெனைத் தேடும் வேளைகளில் நானோ
ஒருபோதும் ஒருவருக்கொருவர்
சந்தித்ததேயில்லை!

நட்சத்திரக்கூட்டங்களிலிருந்து
ஒரு நட்சத்திரம்
நிலாவைப் பார்ப்பதுபோல்
நீயும் நானும்
நானும் நீயும்!

என்றாவது
சந்திக்குமந்த எண்ணிலடங்கா
சந்தோஷ நொடிகளில்
காதலை
நம் காதலிடம் சொல்வதைத் தவிற
சகலமும் பேச
உறக்கம் வராத இரவுகளில்
விளங்கமுடியா சொப்பனங்கள்!

ஒற்றை தரிசனத்தில்
உலகின் அத்தனை
புத்தகங்களையும் படித்துவிட
ஞானியாகிறேன்!

உனைத்தேடும் என்மனத்தவத்தில்
என்னையே மறக்கும் நிலையடைய
உன்னிலுறுதியாய்
நிலைத்து மகிழ்கிறதெந்தன் காதல்
உன் மனதில் நானேயென்ற
தெளிவான நம்பிக்கையில்!

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments