Thursday, January 18, 2007

என் இனிய நண்பர்களே!

பல வருட நண்பனவனை
முதல்முறையாய் இன்று கண்டேன்

மனம் விட்டு பேசினோம்
அவன் நிலை கேட்டதுமெந்தன்
மனநிலை கவலையிலாழ்ந்தது

நண்பனவனின்
முதல் குழந்தை
பிறகு பிறந்த குழந்தை
இரண்டு செல்வங்களும்
மூன்றாம் வயதிலேயே திடீர் மரணம்

பாலைவனத்தில் உழைத்த பணமெல்லாம்
மருத்துவத்திற்கு இரண்டுமுறை அபிஷேகம் செய்தும்
கருணையற்ற மரணம் கொள்ளையடித்ததே - அவனின்
பிஞ்சு பிள்ளைகளினுயிர்களை!

நல்லவன் மிக மிக நல்லவன்
என் நண்பனவன்
அவனுக்கு ஏனோ இந்த சோதனை?

நண்பனவனின் மனைவி
என் அன்பு சகோதரியின்
மன நிலையை நினைத்து கூட
பார்க்க முடியாமல்
கதறி அழுதேன்

அவன் குலம் காக்க
மூன்றாவது குழந்தை
பிறக்கப் போகும் நற்செய்தி
என் மனக்காயத்திற்கு
கொஞ்சம் மருந்திட்டது

அந்த பிள்ளைக்காவது
நீண்ட ஆயுள் கிடைக்க
என்னோடு பிரார்த்திப்பீர்களா
என் இனிய நண்பர்களே !

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள்
நண்பருக்கு பிரார்த்திக்கிறேன்

இனியதோர்
செல்வம் பெற்று
இல்லத்தில்
எல்லோருமின்புற்று
வாழ்க வளமுடன்

Mugundan | முகுந்தன் said...

சுரேஷ்,

நிச்சயமாக வாழ்த்துவோம்.,அவர்கள் மழலையுடன்
விளையாட.....

Anonymous said...

So many people must have already prayed for your friend, and now we also are joining in this prayer. Your friend and his family will definitely be blessed by god to nurture and see the new child grow big!!!

with prayers,
viji s

Anonymous said...

It's so heart touching to know the abundant love and care you have for your friend. When he is blessed with such a good friend like you, God will also definitely bless his family with a new child.

Good wishes for your friendship.

With regards,
Viji S

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments