"வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் அன்று!
வாடிய உள்ளங்களைக் கண்டு வாடும் வள்ளலார் இன்று!!
இளங்காற்று வீசுதே...
என்ற என்.சுரேஷின் படைப்புகளில் இருக்கும் உணர்வுகள்....
உணர்வா? உணவா?
ஆம்...செவிக்குணவு....!
உறவா? பிரிவா? இன்பமா? துன்பமா? இயற்கையா? செயற்கையா?ஊடலா? கூடலா?இரவா? பகலா?பிறப்பா? இறப்பா? அடுக்கடுக்காய் அலையலையாய் எதிர்நீச்சல் போடும் வினாக்களே!
விடை பகருகிறதில் சொப்பன உண்மையுண்டு!!
விதை முளைவிடும்போதே விருட்சமாகும் வீரியத்தோடுதான் பூமியைத் துளைத்து வெளிக்கிளம்புகிறது!
முளைவிட்டு கிளைவிட்டு செடியாகி மரமாகி கனி தருவதற்குள் அது எத்தனை இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கிறது?
தாகத்தோடு வாடி வதங்கிய நாட்கள் எத்தனை? விளையாட்டாக, விறகாக அதன் கிளை விரல்கள் ஒடிக்கப்பட்டபோது அது வடித்த கண்ணீர் யாரறிவார்?
அதன் தோல்பட்டைகள் துகிலுரியப்பட்டபோது வடிந்தது கோந்து என்பார்! பிசின் என்பார்!ஆனால், அது வடித்த இரத்தக் கண்ணீர் என்பதை யாரறிவார்?
சுரேஷ் போன்ற உணர்ச்சிக் கவிஞர்களால் மட்டுமே உணரமுடிந்த உண்மை அது!
பத்துமாதம் பதற்றமாய்ச் சுமந்து, பெத்து, வளர்த்து கண்ணின் கருமணியாய்க் காத்த தாயுள்ளத்தின் தவிப்பை நேற்றுப் பிறந்த உறவுக்காய் ஒதுக்கிவிட்டு ஓடும் பிள்ளை அறிந்தும் அறியாத பொழுதாய் நகர்கிற நத்தையாய் உணர்வுகளை உதறுகிறார், உறவா பிரிவா? - வில் உணர்ச்சிக் கவிஞர்!
காதலா? பாசமா?
வென்றது மூடநம்பிக்கை மூர்க்கமாக முடமானது காதல்! என்பதை "பொன் முகம்" தனில் பொய்யுரைக்காமல் மெய்யுரைக்கிறார் நம் உணர்ச்சிக் கவிஞர்!
மனைவியா? தாயா? பாசமா? பகையா? நீளும் இந்தப் பட்டியலில் நாளும் வளரும் பாழும் விடயங்களை சொல்லமுடியாமல் இவர்,சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் உணர்ச்சிக் கவிஞர் உள்ளம் குமுறுகிறார்,"என்ன சொல்ல?" என்று!
பெண்ணுக்குத்தான் எத்தனை கதாபாத்திரங்கள்? என்று ஏக்கமாய் "மனைவி"யில் உணர்ச்சிக் கவிஞர் அடுக்குகிறார்.
ஆணுக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் இருக்கிறது தாய்மைப்பேறு தவிர என்பதை "மெய்மறந்து" வாழ்த்திப் போற்றிப் பாடியதோடு எங்கள் சமுதாயத்தில் வாழ்ந்து எங்களை வாழவையுங்கள்; எங்களை அனாதையாக்காதீர்கள்...உங்கள் பாதங்களில் வீழ்ந்து கதறி விண்ணப்பிக்கிறேன் எனும்போது வேண்டாம் தம்பதியருக்குள்கருத்து வேறுபாடு! சண்டை வேண்டாம்! தற்கொலை வேண்டாம்!விவாகரத்து வேண்டாம் என்று உரத்துச் சொல்லாமலே உணர்ச்சிகளூடாய் உணர்த்தி நம்மை உறையவைக்கிறார்!
தமிழகத்தில் தவழ்ந்தால், தமிழ்ப்பெண்ணை மணந்தால் பிறவிப்பயனை அடைவாய் என்று தன் உள் மன ஓசையை ஓராயிரம் காரணங்களோடு ஒப்பிட்டு தமிழகத்தை தலைநிமிரவைத்த மகனே......உனக்குதமிழகமே............. தலைதாழ்த்தி வணக்கம் சொல்லும்!
சுனாமிக்கே மன்னிப்பு வழங்கி, திருந்திவிடு என்று தீர்ப்பும் சொல்லி மன்னிப்பது மனிதநேயம் என்று தனித்துவத்தை - தம் தனித்துவத்தை தரணிக்குணர்த்துகிறார் நம் உணர்ச்சிக்கவிஞர்!
உந்தன் நூறு குறைகளை மறைவில் உறங்கவைத்துவிட்டு ஒருவரின் ஒருதவறை நீயேன் பேசுகிறாய்? என்பதில் எவ்வளவு பொருள்பொதிந்து கிடக்கிறது? "உன் முதுகைக் காணையலாதவன், அடுத்தவனின் முன்புறத்தை குறைகூறிப்பேசத் தகுதியில்லாதவன்" என்று போதித்த இறைமகன் இயேசுவின் இறை வசனத்தின் மறுபிறப்பை "ஊர் பேச்சில்" உள்ளம் திறக்கிறார் இவர்!
ஊனம் ஒரு குறையல்ல என்று இரு கைவிரல் இல்லாரைச் சுட்டி அவர்தம் சாதனையைச் சொல்லி ஒரு நிறையாளராய் உலகிற்கு உணர்த்தி, ஊனமுற்றோருக்கு "விரல்களில்" உற்சாகமூட்டி நம்பிக்கை விதை தூவும் இந்த நல்மனதாளர், ஊனம் உடம்பில் தான், உள்ளத்தில் அல்ல என்பதை எவ்வளவு பக்குவமாய் போதித்திருக்கிறார்; இனியொரு இனிய உலகம் காண இவர்களுக்கு இனியவர் கவிதை வெளிச்சப்பூக்களை "விரல்களில்" உயர்த்திக் காட்டியுள்ளார்!
பாசத்தின் உண்மையை முதியோர் இல்லத்தில் முகிழ்ப்பதைப் பார்க்கலாம்!
நடைபாதை நாயகியாய் முகம் காட்டும் முத்தம்மா! நீயே கோபுர முத்....தம்மா! முகவரி இல்லையென்றாலும் அகவரி அகலமாய் முத்தம்மாவுக்கு! மாடிவீடுகளுக்கு இல்லா மனவிலாசம் மொத்தமாய் நடைபாதைகளுக்கு நகர்ந்துவிட்டதை கருப்புமுத்து நம் இதயச் சுரங்கத்துக்குள் இதமாய் அமர்ந்து கொண்டு எழ மறுக்கிறது!!
அரசே பத்து விழுக்காடு ஊதியத்தை பிள்ளைகளிடமிருந்து பெற்று பெற்றோருக்களிக்க யுத்தமொன்று முதியோருக்காய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்!
பிச்சை எடுப்பவர்களைக்கூட சகோதரனாக, சகோதரியாகஏற்றுக் கொள்கிற பக்குவம் இவருக்கு வாய்த்திருப்பதை ஏழைகளின் ஏழைகளில் வெள்ளைக்காரர்களிடம் வெள்ளையப்பனைக் கொடுத்து ஏழைகள் வெள்ளையரிலும் இருக்கிறார்கள் என்று ஏகாந்தமாய்ச் சொல்லும் மிடுக்கு இருக்கிறதே அதுதான் கவிஞனின் கர்வம்! அந்தக் கர்வம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய கர்வம்! அந்தக் கர்வம் காட்டி தமிழர் மானம் காக்கிறார், கவிஞர்!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று போதித்தார் அன்று!
இன்றோகவிஞர் ஆடை கிழித்தவனுக்கு ஆடை கொடு! நன்றி மறந்தாலும் உதவுங்கள்! உங்கள் சோற்றில் மண்போட்டாலும் அவனுக்குச் சோறிடுங்கள் என்று இதயசுத்தியோடு மன்னியுங்கள் என்று இறைத் தத்துவம் உதிர்க்கிறார் "நேசம்" கவிதையில்....!
மரியாதையாக பூங்காற்று பாடலைச் சொல்லி ஆறாயிரம் குளிர் நிலவுகள் வந்து அந்தரங்கங்களில் சிலிர்க்க வெயில் அதனின் உடைமாற்றியது என்ற சூழலை இயக்குனர் பாரதிராஜாவாக மாறி கவிஞர் கம்பீரம் காட்டுகிறார். ஒருவனொக்கொருத்தி என்ற இந்திய சம்பிரதாயமுறை மரணப்படாமலிருக்க மனைவியரே நீங்கள் கணவரை நேசிப்பதை வெளிப்படுத்தத் தவறாதீர் என்று சொல்லும்போது ஒரு முதிர்ச்சி பெற்ற கவிஞனாக நம்மை மகுடம்சூட்ட வைக்கிறார்.
நண்பனும் சினேகிதியும் உரைநடையை உள்ளம்கிள்ள, எண்ணம் இனிக்க, எண்ணியதை திண்ணமாய் "மனைவியிடம், உண்மை சொல்லுகிறேன் என்று தங்கள் முன்னால் காதலை சொல்ல வேண்டாம்; நிஜங்கள், நிஜங்களாக ஏற்கப்படாதவரை, என்கிறார்.
சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லத்தான்துடிக்கிறேன்; ஆனால் தொண்டைவரை வந்தாலும் அதற்கு மேல் சொல்ல ஆனந்தன் மனைவி போல் மனைவியர்களும் ஜெயஸ்ரீ போன்ற சினேகிதிகளும்.
சிறைச்சாலை எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு இவரது கற்பனைக் கடிதம்....இது ஆட்சியாளர்களுக்கான சிந்தனைத்தூவல்கள்! இவரின் எண்ணக் குவியல்கள்! நாளையச் சட்டமாகவேண்டும்! ஏழைக்குழந்தைகளுக்கான பள்ளிகளாகவும் முதியோர் இல்லங்களாகவும் பேருக்கு ஒரு சிறைச்சாலை; அதுவும் சிறையாக இல்லாமல் மனநிலை திருத்தகம் என்ற பெயரில் அமையட்டும் என்று புரட்சிச் சிந்தனைகளோடு தன் மனச்சிறையை திறந்துகாட்டும் இவர் இந்திய உள்துறை அமைச்சராகட்டும் என்று இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பூக்களை வாரி இறையுங்கள் என்று என் உள்மனம் கோரிக்கையொன்றையும் உரத்து வைக்கத் தோன்றுகிறது!
கவிப்பேரரசு ஆகவேண்டும், இப்போதைய தாயும் மனைவியும்,கூடவே செல்லமகளாக மட்டும் "தங்கமணி" அக்காவே எனக்குப் பிறக்க வேண்டும் என்ற இவரது மூன்று ஆசைகள்! அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இது நிறைவேறவேண்டும் என்பது இவரது தாளாத ஆசை! எனக்கு ஒரு வரம் கொடுக்கும் வல்லமை இருந்தால் இந்தாபிடி என்று கொடுத்துவிடுவேன்! வரம் கொடுக்கும் வல்லமை இல்லை;சாபம் கொடுக்கிறேன்.....இதோ இந்தப் பிறவியில் நீயொரு கவிப்பேரரசு..மக்கள் மனம் கமழும் கவிப்பேரரசுவாக திகழக்கடவாய்!
பெரும்பாலானவர்களுக்கு அசாதாரணமாய் நடந்துவிடும் குற்றவுணர்வில் "டிரைவர் தம்பி"யில் கவிஞரும் சிக்கிக்கொள்கிறார்! அதற்காக அவருக்கு அவரே தண்டனை கொடுத்து, அது முடியும் முன்பே ஓட்டுனர் அங்கு தோன்றி பாவமன்னிப்பு வழங்குவது உண்மை அன்புக்கு பழச்சாறு கொடுத்து ஆசீர்வதித்த காட்சி அனுபவப் பட்டவர்களுக்குத்தான் இது தெரியும்!
கதைகளே பாடமாக இருப்பதைக் கவனமாய்ச் சொல்லும் இவரது கருத்துக்கள் வாழ்க்கைக் கதைக்கு ஒவ்வொருவரும் கவனமாய்க் கொள்ளவேண்டியது என்பதில் எள்முனையளவு கூட அய்யமில்லை!
தாமதங்கள் கூட சில நேரங்களில் நன்மைக்கே என்பதைச் சிறு சம்பவத்தால் சிலாகித்துச் சொல்லி தாமதங்களுக்காக வருந்தவேண்டாம் என்கிற இவரது சித்தாந்தம் அனேகர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகளாக நிழலாடும் நிசங்கள்தானே!
விருந்து கொடுத்துச் சரிந்தோர் இல்லை என்று விருந்து கொடுக்க வேகப்படுத்துகிறார்; யாருக்கு? எப்போது? எங்கு என்பதை அவருக்கே உரிய வள்ளல் உள்ளத்தோடு பட்டியலிடும் பாங்கைப்பார்க்கும் போது "பசியாறிட" வாங்க என்று முகமறியாதாரைக்கூட முகமலர்ச்சியோடு உபசரிக்கும் கிராம உபசரிப்புகளில் மூழ்கி எழவைத்தாலும், இவரோ வரவழைத்து விருந்து படைக்கும் வழக்கம்மாற்றி தேடிப்போய் விருந்து படையுங்கள் என்று "அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஏழைப்பள்ளிகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மஞ்சள் கயிறுகூட வாங்க வசதி இல்லாத மானமுள்ள சகோதரிகள்..."என்று பட்டியலிடும் வித்தியாச பட்டியலில் வெளிச்சமிடுகிறார்!
அடிக்கிற வெய்யிலில், கொஞ்சம் நிம்மதியா கண்ணயர முடியுதா? அதை விக்கிறேன், இதை விக்கிறேன் என்று தூக்கிகிட்டு வந்துடுறாங்க என்று நம்மில் பலர் வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல்தலை, கை, தோள் சுமையாய் சுமந்து வருவோரை நொடியில் விமரிசித்துவிடுவோம். ஆனால் சுமை சுமந்து வருபவர்களின் வெளிச்சுமை தெரிந்த நமக்கு அவர்களின் உள்(ளச்)சுமை தெரியாது. இந்தக் சமுதாயத்தில் பலதரப்பட்ட வாழ்க்கை வாழ்வோரின் சூழல் நாம் அறிவதில்லை; அப்படி அறியும்போது அவர்களின் சோகங்கள், ஏக்கங்கள் தீர நம்மால் முடிந்த சிறு உதவையையாவது செய்யவேண்டும் என்று எண்ணுவோம்; அதைத்தான் கவிஞர் நோபல் பரிசில் தமக்கே உரிய நடையில் இதயம் பிழியச் சொல்லியிருக்கிறார்!
அன்ன விசாரம் அதுவேவிசாரம்! அதுவொழிந்தால் சொன்ன விசாரம் ! தொலையாவிசாரம் நற்றோகையரைப் பன்ன விசாரம் பலகால்விசாரம்! இப்பாவி நெஞ்சுக்கு என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சியே கம்பனே என்று பட்டினத்தார் பாடியுள்ளார்.
துன்பமே எனக்கு இல்லை. நான் எவ்விதக் கவலையும் இன்றி மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று யாராலும் கூறமுடியுமா? உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் துன்பம்; ஏதாவது ஒருவகையில் எல்லோருக்கும் வருகிறது; அவற்றை வென்று வாழ்வதுதானே வாழ்க்கை! வாழ்க்கையில் வாடி வதங்கி நிற்போருக்கு நம் உணர்ச்சிக்கவிஞர் உயிர் தருகிறார், தம் கவிதைகள்மூலம்!
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன- கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்சாந்துணையும் சஞ்சலமே தான்-உண்பது நாழி- சாப்பிடுவது ஒரு பிடி சோறு, உடுப்பது நான்கு முழ ஆடை. ஆனால் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் இருக்கின்றனவே அவை கோடி. அத்தனை கோடி எண்ணங்களுடன் வாழும் மனிதனின் வாழ்க்கை துன்பமானதே என்கிறார் ஒளவைப்பிராட்டி!
இப்படி துன்பம் மிகுந்த வாழ்க்கையில் துன்பப்பட்டு நிற்போருக்கு துயரப்பட்டு நிற்போருக்கு தம் கவிதைகளால் மட்டுமல்லதாமே அவர்கள் வாழ்வில் பங்கெடுத்து ஆற்றுப்படுத்த முயல்கிறார்.
மலரினும் மெல்லிய உள்ளம் வாய்க்கப்பெற்றவர் இவர்! இவர் கவிதைகளை வாசிப்போர் அன்பிலார் எனினும் அன்பு கொள்வார்; அடுத்தவர் மீது இரக்கம் கொள்வார்;
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அன்று!- இன்றுவாடிய உள்ளங்களைக் கண்டபோதெல்லாம் வாடிப்போகும் வள்ளலாராய் இன்று...! இவரும் வாடிக் கவிதை வடிக்கும் இவர் நம்மோடு வாழும் வள்ளலார்!
இவர் மக்கள் மனங்கவரும் கவிப்பேரரசாக வலம்வரும் நாள் வெகுதூரமில்லை! எல்லோரும் இவர் கவிதையில் மூழ்கி யான் பெற்ற இன்பத்தை நுகர அழைக்கின்றேன்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,அமெரிக்கா
----------------------------------------------------
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை தி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559
Wednesday, April 2, 2008
இளங்காற்று வீசுதே...
Labels:
என் சுரேஷின் கவிதைத் தொகுப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
Recent Comments
Anonymous commented:
very nice sir, I like this story
பூங்குழலி commented:
கண் கலங்குது ணா
ராமலக்ஷ்மி commented:
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
cheena (சீனா) commented:
This comment has been hidden from the blog.
அன்புடன் அருணா commented:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!
அறநெறி முனைவர் க. பழனிச்சாமி commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
vaalthukalhttp://www.kovaikkavi.woedpress.com
N Suresh commented:
மிக்க நன்றி அம்மா!பேரன்புடன் என் சுரேஷ்
vetha (kovaikkavi) commented:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.வேதா. இலங்காதிலகம்.http://www,kovaikkavi.wordpress.com
N Suresh commented:
மிக்க நன்றி திருமதி ரமலக்ஷ்மி அவர்களே!
N Suresh commented:
This comment has been hidden from the blog.
Anonymous commented:
This comment has been hidden from the blog.
Dhavappudhalvan commented:
This comment has been hidden from the blog.
Rathnavel Natarajan commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.
vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.
vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh
Anonymous commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.....
ராமலக்ஷ்மி commented:
தற்சமயம் நலம் என்பதறிந்து ஆறுதல். கடவுளுக்கு நன்றி.
ராமலக்ஷ்மி commented:
மிக நன்று. நல்வாழ்த்துக்கள்!
Shakthiprabha (Prabha Sridhar) commented:
அருமை. வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு புதுப் பொலிவுடன் துவக்கம்.
சமுத்ரா commented:
வாழ்த்துக்கள்
Anonymous commented:
GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.
Shakthiprabha (Prabha Sridhar) commented:
வாழ்த்துக்கள் :)
1 comment:
Res.Sir,
the following are from the Albert in words... lots are there but few...
அதன் தோல்பட்டைகள் துகிலுரியப்பட்டபோது வடிந்தது கோந்து என்பார்! பிசின் என்பார்!ஆனால், அது வடித்த இரத்தக் கண்ணீர் என்பதை யாரறிவார்?
தமிழகத்தில் தவழ்ந்தால், தமிழ்ப்பெண்ணை மணந்தால் பிறவிப்பயனை அடைவாய் என்று தன் உள் மன ஓசையை ஓராயிரம் காரணங்களோடு ஒப்பிட்டு தமிழகத்தை தலைநிமிரவைத்த மகனே......உனக்குதமிழகமே............. தலைதாழ்த்தி வணக்கம் சொல்லும்!
பாசத்தின் உண்மையை முதியோர் இல்லத்தில் முகிழ்ப்பதைப் பார்க்கலாம்!
நடைபாதை நாயகியாய் முகம் காட்டும் முத்தம்மா! நீயே கோபுர முத்....தம்மா! முகவரி இல்லையென்றாலும் அகவரி அகலமாய் முத்தம்மாவுக்கு! மாடிவீடுகளுக்கு இல்லா மனவிலாசம் மொத்தமாய் நடைபாதைகளுக்கு நகர்ந்துவிட்டதை கருப்புமுத்து நம் இதயச் சுரங்கத்துக்குள் இதமாய் அமர்ந்து கொண்டு எழ மறுக்கிறது
பிச்சை எடுப்பவர்களைக்கூட சகோதரனாக, சகோதரியாகஏற்றுக் கொள்கிற பக்குவம் இவருக்கு வாய்த்திருப்பதை
"பசியாறிட" வாங்க என்று முகமறியாதாரைக்கூட முகமலர்ச்சியோடு உபசரிக்கும் கிராம உபசரிப்புகளில் மூழ்கி எழவைத்தாலும், இவரோ வரவழைத்து விருந்து படைக்கும் வழக்கம்மாற்றி தேடிப்போய் விருந்து படையுங்கள் என்று "அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஏழைப்பள்ளிகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மஞ்சள் கயிறுகூட வாங்க வசதி இல்லாத மானமுள்ள சகோதரிகள்..."என்று பட்டியலிடும் வித்தியாச பட்டியலில் வெளிச்சமிடுகிறார்!
துயரப்பட்டு நிற்போருக்கு தம் கவிதைகளால் மட்டுமல்லதாமே அவர்கள் வாழ்வில் பங்கெடுத்து ஆற்றுப்படுத்த முயல்கிறார்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,அமெரிக்கா
NALLA MANAM PADAITHA MANITHARAE NEER NEEDULI VAAZHGA
Vazhthum nenjam...vijai
Post a Comment