Monday, March 5, 2007

மேகக்கூட்டம்

கவிதையா?
நான்கு வரிகளிலென்றால்.. சரி!

சிறுகதையா?
துணுக்கின் படிவமென்றால்.. சரி!

நோவல்?
நேரமேயில்லை!

பாடல்?
நல்லிசையோடிருந்தால் - அல்லது
இசை பாடலை ஆக்கிரமத்தால்!

என்னாதான் வேண்டும்?
ஒன்றும் வேண்டாம்
எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
அதுவே இலக்கணத்தின் உச்சம்!

ஒரு சமுதாயம் முன்னேறவும்
அழியவும் சினிமாவும் காரணமா !!!

இந்த கால சினிமா
முன்வைக்கும்
வன்முறையும் ஆடையில்லா ஆட்டமும் - என்
கண்முன்னே ஓடி வர...

கோபத்தாலென் இமைகளை
இழுத்தி மூடினது கண்கள்

என் மனத்திரையில்
ஆஸ்திரேலிய காடுகள்
எரிந்துகொண்டிருக்கின்றன...

சினிமா சுருள்களை நானந்த
நெருப்பிலிட்டு மகிழ்கிறேன்

மஞ்சள் புகையும் சிவப்பு புகையும் பொங்கி வர
வெட்கத்துடனும் பயத்துடனும்
விரண்டோடுகிறது மேகக்கூட்டம்!

Saturday, March 3, 2007

நியாமான எதிர்பார்ப்புகள்


தாய்தந்தையர் பிள்ளைகளிடம்
தேடும் பாசமும் நன்றியும்

முதல் மாணவனின் தோள்கள்
தேடும் சமூகத்தின் பாராட்டு

அழகிய குழந்தையின் புன்னகை
தேடும் பாச ஸ்பரிசம்

கலைஞர்களின் உழைப்பு
தேடும் கரகோஷம்

கவிஞனின் கவிதைகள்
தேடும் மௌன நொடிகள்

மண்ணின் மைந்தர்கள்
தேடும் சுதந்திரம்

ஆசை வேண்டாமென்று சொன்ன புத்தர்
தேடும் ஆசையற்ற சமூகம்

கடமை செய் பயனை எதிர்பாராதே என்ற கீதை
தேடும் தர்மமும் சத்தியமும்

Thursday, March 1, 2007

சிந்திப்போம்

விரல்களிழந்தவனின்
நிலையுணர்தல்
மோதிரமில்லையென்ற
கவலை தீர்க்கும்!

அகதிகள் முகாமில்
ஒரு நொடி வாழ்தல்
அவர்களின் விடியலில் தான்
நம் சுதந்திரம் என்றிடும்!

அடுத்தவனின் நிலையறியும்
அழகிய ஒற்றை வழி
அவன் நிலையிலிறிந்து
நமது தவறை காண்பதே!

யாரையும்
காயப்படுத்தாத மனதில்
யாரிடமும் கோபமில்லை
யாராலும் கவலையுமில்லை!

தீயைக் கண்டு எரிந்து விடாத
மழைவெள்ளம் கண்டு ஈரமாகாத
திரை போல் நம் மனமிருந்தால்
அமைதி நிச்சயம்!

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments