Monday, March 5, 2007

மேகக்கூட்டம்

கவிதையா?
நான்கு வரிகளிலென்றால்.. சரி!

சிறுகதையா?
துணுக்கின் படிவமென்றால்.. சரி!

நோவல்?
நேரமேயில்லை!

பாடல்?
நல்லிசையோடிருந்தால் - அல்லது
இசை பாடலை ஆக்கிரமத்தால்!

என்னாதான் வேண்டும்?
ஒன்றும் வேண்டாம்
எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
அதுவே இலக்கணத்தின் உச்சம்!

ஒரு சமுதாயம் முன்னேறவும்
அழியவும் சினிமாவும் காரணமா !!!

இந்த கால சினிமா
முன்வைக்கும்
வன்முறையும் ஆடையில்லா ஆட்டமும் - என்
கண்முன்னே ஓடி வர...

கோபத்தாலென் இமைகளை
இழுத்தி மூடினது கண்கள்

என் மனத்திரையில்
ஆஸ்திரேலிய காடுகள்
எரிந்துகொண்டிருக்கின்றன...

சினிமா சுருள்களை நானந்த
நெருப்பிலிட்டு மகிழ்கிறேன்

மஞ்சள் புகையும் சிவப்பு புகையும் பொங்கி வர
வெட்கத்துடனும் பயத்துடனும்
விரண்டோடுகிறது மேகக்கூட்டம்!

1 comment:

நந்தா said...

/என்னாதான் வேண்டும்?
ஒன்றும் வேண்டாம்
எல்லாம் சேர்ந்த சினிமா போதும்
அதுவே இலக்கணத்தின் உச்சம்! /

வரிகளின் அமைப்பு அருமையாக இருக்கிறது. நல்ல கவிதை. பாரட்டுக்கள்.

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments