Thursday, March 17, 2011

திரு மைக்கல்ராஜ் அவர்கள் இறைவனின் ராஜ்ஜியத்திற்கு...



எனது ஆசிரியர் திரு மைக்கல் ராஜ் அவர்களைப் பற்றி எனது வலைதளத்தில் 11/6/2008 - ல் பதிவு செய்திருந்தேன். இதை தயவாக வாசிக்கவும்.

http://nsureshchennai.blogspot.com/2008/07/blog-post_11.html

அன்புடன் குழுமத்தின் ஒரு சந்திப்பில் தலமை விருந்தினராக வந்து எல்லோரையும் வாழ்த்தினார்.

நேற்று (16-03-2011) இரவு 7.00 மணி அளவில் மாரடைப்பால் இவர் இறைவனடி சேர்ந்தார்.

நாளை சென்னையில் உள்ள சின்னமலையில் இவருக்கு இறுதி மரியாதை செய்ய உள்ளது.

அவரின் அன்பைப் பெற்ற என்னையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் தவிக்கிறோம்.

இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஆழ்ந்த துயரத்துடன்
என் சுரேஷ்

Saturday, March 12, 2011

இனிய மனிதர் தம்பி காதர் பாஷா அவர்களை வாழ்த்துங்கள்!!!



காதர் பாஷா


பாஷா - என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் மாணிக்கம் என்ற கதாபாத்திரம் இவரைக் கண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டதோ?

அலுவலகரீதியாக இவரோடு ஓராண்டு தொலைபேசியில் பேசிய பிறகு ஒரு நாள் நான் நேரடியாக இவரைக் காணச் சென்று அவசரமாக நான் கொடுத்த வேலையை முடிக்க என் கருத்துக்களை சொல்லி வந்து விட்டேன்.

ஓராண்டு தொலைபேசி நட்பில், சார்... என்று அழைக்க ஆரம்பித்து பிறகு என்னை அண்ணா என்றழைக்க இவருமெந்தன் அன்புத் தம்பி ஆனார்!

என்னை விட வயதில் பெரியவர்கள் அண்ணா என்றழைக்கையில் தான் கொஞ்சம் சங்கடம். அனால் இவர் முதிர்ச்சியில் மட்டுமே என்னை விட மூத்தவர்.

அன்று மாலை, எனக்கு தம்பி காதரிடம் பேச வேண்டுமென்று மனதில் பட்டது.

கொஞ்சம் நேரம் அன்றும் அதற்கு பிறகும் பேசியதில் என் மனதில் பதிவானவைகள்:

வெற்றிபெற்ற எல்லோருக்கும் கடினமான பாதைகள் உண்டு; பலர் அதை மறந்து விடுவார்கள் ஆனால் காதர் அதை ஒவ்வொரு நொடியும் நினைவு கோருகிறார்.

"தாய் என்ற பாசத்தின் அதிசயத்தை மக்கா அனுப்ப தூய்மையான உழைப்பும் சேமிப்பும் செய்து வருகிறேன்" என்றார். நான் உதவி செய்ய முன் வந்தேன், அன்போடு மறுத்தார்.

சொந்தமான நிலத்தில் மிகச்சி சிறியதாக ஒரு வீடு கட்டித் தான் வாழ்கிறார். "ஏன்" என்று கேட்டேன், " "எங்கள் சொந்த பந்தத்தில் எத்தனையோ பேர் வறுமையால் போராடுகிறார்கள் தெரியுமா அண்ணா! அவர்களுக்கு உதவ என் வியர்வைத்துளிகள் மண்ணில் விழட்டும்; எனக்கு இநத வீடே போதும்" என்றார்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க பொருளாதாரத்தால் தடைபட்ட ஒரு மாணவன் ( இந்து மதத்தை சார்ந்தவன்) இவரிடம் வேலை கேட்டு வந்திட, காதர் அவனுக்கு வேலை கொடுத்து உதவினாலும், அந்த மாணவனை ஓர் எஞ்சினியரிங்க் கல்லூரியில் எப்படியாவது சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படார். ஒரு வருடகாலத்தில் அவனின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்து அதில் தனது சொந்த பணத்தையும் போட்டு காத்திருந்ததை அவர், "அண்ணா இந்த மாணவனை ஓர் எஞ்சினியராக பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார். என்னால் முடிந்த மிகச்சிறிய உதவி செய்தேன். தற்போது நல்லதொரு எஞ்சினியரிங்க் கல்லூரியில் அந்த மாணவன் படிக்கிறான்! - இதனால் இவருக்கு என் மீது அதீத பாசம்! என்ன தான் வேலையில் பிசியாக இருந்தாலும் எப்போதாவது நான் தொலைபெசியில் அழைத்தால் உடனே சந்தோஷமுடன் என்னோடு பேசுவார்.

மனைவியை கிண்டல் செய்தும் அடுத்தவர்களிடம் நகைச்சுவைகளை பேசியும் சிரிக்கும் வாலிபர்கள் அதிகம் இருக்கும் இந்த சமுதாயத்தில் இவர் வித்தியாசமானவர். "அண்ணா எனக்கு இறைவன் மிகவும் சிறப்பான பரிசுகளை தந்துள்ளார். அந்த சிறப்புப் பரிசள் தான் எனது பாசமான மனைவியும் இரண்டு குழந்தைச் செல்வங்களும்" என்று சொல்லி மகிழ்ந்தார்.

இன்று இவர் டிஜிட்டல் பான்னர் துரையில் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான ஒரு கலைஞனாக வளர்ந்திட இவருடைய உழைப்பு தான் என்ற எனது புரிதலை இவர் சம்மதிக்காமல் சொல்கிறார், " அண்ணா இதற்கு காரணம் எனது தாயின் கடினமான உழைப்பால், அவர்கள் என்னை எங்கள் குடும்பத்தின் வறுமையும் பாராமல், படிக்க வைத்தது தான் " என்று.

குறிப்பிட ஒரு நபருக்கு ஓர் உதவி செய்ய இவரால் இயலவில்லை. ஆனால் வெற்றிக்கு வழியிட்டு கொடுத்தார். அந்த உதவி பெற்றவர் என்னுடைய நண்பர்களில் அதிக காலம் எனது நட்போடு இருக்கும் ஏழை நண்பன், கே.ஜான்.

கணினியில் இவர் அளவுக்கு திறமை கொண்ட ஒருவரை இதுவரையில் நான் பார்த்ததில்லை.

இவர் முகநூலிலும் இருக்கிறார்.

இவருடைய அலுவலகஇணையதளம் www.marcads.com

உண்மை -உழைப்பு -எந்நேரமும் இறை உணர்ந்து வாழ்ந்தல் -அடுத்தவனுக்கு ஜாதி மத வித்தியாசமின்றி உதவ காத்திருக்கும் இதயம் கொண்டு வாழ்க்கையை மகிழ்தல் - நல்ல மகன்- நல்ல கணவர்- நல்ல தந்தை- எல்லோருக்கும் அன்பின் சொந்தம் ----- என இவரைப் பற்றி உண்மையான தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

" எல்லா புகழும் இறைவனுக்கே " - என்பார் தம்பி காதர் இதை வாசித்தால்!

நாளை 13 ஆம் தேதி இந்த நல்ல மனிதருக்கு பிறந்த நாள்.

என்/நம் இனிய இந்த முகநூல்/வலைதள - நட்பின் சகோதரனுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த சமாதானமும், நோயற்ற வாழ்வும், குறையற்ற செல்வமும், அன்பின் குடும்பமும் தொடர்ந்து அமைய அவருடைய பிறந்த நாளன்று, ஆதாவது 13/3 - நாளை நாம் வாழ்த்துவோம்! கவிதையாலும் வாழ்த்துவோம். தமிழன்னையும் மகிழட்டும்!

இது போன்ற நற்பணி செய்ய முன் வரும் நண்பர்களுக்கு முன்னதாகவே எனது நன்றிகள் பல!

இவருக்காக ஒரு நொடி கண்களை மூடி பிரார்த்தனை செய்வோம்!

நல்லவன் வாழ்வான்!
காதர் வாழ்வான் - இதற்கு
கிருபை தந்து கனியட்டும் இறைவன்!

அன்புடன் காதரின் அண்ணன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments