Sunday, February 18, 2007

உன்னையே தேடும் கவிதைகள்...



அணிந்துரை
==========

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்றார், பாரதியின் பாசறையில் பயின்ற பாவேந்தர்! அந்த தமிழ், இன்பத்தமிழ், நம் தமிழாக வாய்த்தது நாமனைவரும் பெற்ற பேறு! ஒரு காலத்தில் ஒரு சிறுநிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மொழி, இன்று உலகளாவிய மொழியாக மலர்ந்துள்ளதை
நாம் கணும்போது, நமது உள்ளம் பூத்துபோகிறது!

கவிஞன் என்பவன் தான் வாழும் சமுதாயத்தின் தாக்கம் உள்ளவன். வேதனையின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் எழுச்சி, தோல்வியின் பொசுங்கலில் உயிர்த்தெழும் பறவையைப்போல, சேரிகளில் மணக்கும் சந்தனத்தையும்,உப்பரிகையில் எடுக்கும் முடைநாற்றங்க்களையும், மதம், பணம் கடந்து வாழும் காதலையும், மனிதநேயம் வெளிப்பட வேண்டியநேரத்தில் மௌனமாயிருப்போரையும், சமூக அக்கரையோடு ஆர்ப்பரித்து உரத்து உலகிற்குச்சொல்லி சிந்தனை விதையை எவன் விதைக்கிறானோ, அவனே கவிஞனாக முகம்காட்ட முடியும்.

அந்த வகையில் சகோதரர் கவிஞர் சுரேஷ் உணர்ச்சிகயை உயிராகக் கொண்ட கவிஞராக வலம் வருகிறார்.

வெளிநாடுவாழ் தமிழர்கள், தாயகத்தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று அன்பு எச்சரிக்கை விடுகிறார் கவிஞர். தமிழின்பால் ஈர்க்கப்பட்டு தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுகின்ற இவர் படைப்புகள் தலைப்பில் உண்மை பேசும் போது இவர் கவிதா ஆர்வாலர்கள் மனதில் குன்றென உயர்கிறார்!

தாய்மை, தோழமை, கூடா நட்பு, வேண்டுகோள், பெரிய பெரிய ஆசை என்று ஏராளமாய் பிறருக்காய், உணர்வாய்ச்சுரந்த இவரின் கவிதைகளை கவிதை தாகமுள்ளோர் பருகி ஆனந்திக்கலாம்!

கவிதை என்றாலே கற்பனை என்ற எண்ணம் கவிழ்ந்து உண்மையை நிமிர வைத்திருப்பதை உணரலாம். சமூகத்தின் அவலங்களுக்கு செவி சாய்ந்து காகிதத்தில் வடித்தெடுக்கும் புதுமைச்சிற்பி என்றால் அது மிகையில்லை!

பிச்சைக்காரியைக் கூட சகோதரியாக ஏற்றுக்கொள்கின்ற மனம் எல்லோருக்கும் வாய்த்து விடாது; கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது; எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னேறிய நாடுகளில் சிலவற்றைப் பட்டியலிட்டு, இப்படி ஒரு கலவையாக இந்தியா புதுவார்ப்பாய் மாறவேண்டும் என்று புதியவை தேடுதல் கவிதையில் அதிபர் அப்துல்கலாம் கனவை கவிதையாய் வடித்துள்ளார்.

இலட்சாதிபதிகள் கோடீசுவரர்களாகவும், கோடீசுவரர்கள் மேன்மேலும் கோடிகளைக் குவிப்பதும் சினிமாவும் அரசியலும் ஏழைகளை மூலதனமாய் வைத்து தங்கள் வெற்றிப் படிகளைக் கட்டுவது ஒருபுறமும் ஏழைகள் நிலையில் எந்த மாற்றமுமில்லாமல் ஏழைமக்கள் பட்டினியால் மரித்துக்கொண்டிருப்பது ஒருபுறாமிருந்தாலும் இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வதை கேட்டு நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் முகத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!

பிறந்த வீட்டை மறந்து புகுந்தவீட்டை பிறந்த வீடாகக்கருதி தன்னை, அன்னையாக, மனைவியாக அக்காள், தங்க்கை, அண்ணி, சித்தி, பெரியம்மா என்று பல்வேறு முகங்காட்டி, தன்னை இணைத்துக்கொண்ட குடும்பத்திற்காய் சேவகியாய் வலம் வரும் அண்ணி!


இந்த மூன்றெழுத்தில் குடுமபமே உயிரின் உயிராய் உறைந்து கிடப்பதையும் ஒருநாள் அந்த அன்பு ஜீவன் கொடிய நோயின் தாக்குதலில் மருத்துவமனையில் அடைக்கலமாகி விட்டதை நெஞ்சுருகச் சொல்லும்போது... அடடே... பாசத்தின் நேசங்களில் கசியும் இரத்தக்கண்ணீரில் வாசிக்கும் எல்லோரையும் கரைய வைக்கிறார் கவிஞர் சுரேஷ்!

கரடுமுரடான நிலத்தைக்கூட தன் உழைப்பால் சீர்திருத்தி நந்தவனமாக்கும் அதிசயமும், வறட்சியால் நில உதடு வெடித்து தாகத்துக்கு ஏங்கும் கிணற்றை ஆழப்படுத்தியோ, புதிய கிணறு ஒன்றையோ தோண்டிச்சுரந்த நீர்பாய்ச்சி நில மகளைக்குளிர்வித்து அவள் பூக்கும் புன்னகை என்ற கம்பீர விளைச்சல் கூட விவசாயியின் வியர்வைக்கண்ணீர்த் துளியால் என்பதை கவிஞர் சுரேஷ் ஆச்சரியித்து அதிசயக்கிறார்.

என்னதான் அதிசயம் கண்டாலும், காடுவெள்ஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் இன்னொரு முகத்தையே அதிசயம் கவிதையில் பார்க்கிறேன்.

சில கவிதைகளை இதுவெல்லாம் கவிதையா? என்று சிலர் முகஞ்சுளிக்கலாம்; ஆனாலும் அக்கவிதியின் ஆதாரசுருதியிலே அகந்தோய்ந்து அவரின் எண்ண அதிர்வுகள் எழுச்சியோடு சிறகு விரித்ததாகத் தான் நான் கருதுகிறேன்.

தமிழின்பால் கொண்ட காதலால் தமிழுக்காக தமிழருக்காய் தமிழுணர்வோடு எழுதுகிற
சகோத்ரர் கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு தமிழர்களான நாம் ஊக்கமும் உற்சாகமும் அளிக்காவிட்டால் பின் யார்?

இந்தச்சமுதாய அமைப்பை தலைகீழாக மாற்றி அமைக்க முயலும் இவரின் உள்ளுணர்வுகளின் வழியிலே... இது இவரது இரண்டாவது புத்த்கமாகும்!


காலமறிந்து கூவும் சேவல்! காலம் உருவாக்கிய கவிஞர் இவர், ஆனாலும் காலத்தின் பிடர்பிடித்து உந்திப் பெரும் புரட்சி செய்யவிருக்கின்ற கவிஞர் என்பதால் படித்து இன்புறுங்க்கள்!


சி.எஸ். ஆல்பர்ட் பெர்னாண்டோ
அமெரிக்கா
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலைதி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments