Tuesday, February 20, 2007

காதலியே!

சந்திரதேவதையே!
சிந்திக்க நேரமிருந்தால்-உனை
சந்தித்தும் மகிழ்ந்திருப்பேன்!

எந்தன் இயந்திர வாழ்க்கையின்
இதயத்துடிப்பை உணர்ந்துந்தன்
நினைவுகளின் தென்றலில் தான்!

ஞாபகங்கள் வெட்கப்படுகிறது
என் இதழை ஈரமாக்கின
உன் இதழ்களை நினைத்ததும்!

அழகிய பூங்காவில் நாம் !

எனது விரல்களை வரவேற்ற
மாங்கனிகளுக்கும் மயக்கம்!

முத்தமிடும் அந்த தருணங்களில்
தேனில் ஊறின கனிகளாகினோம்

நம் பாதங்களும்
முத்தமிட்டுக்கொண்டன...

பூங்காவின் சிலைகளெல்லாம்
நமது லீலைகள் கண்டு
வியந்தவைகளோ...!

விடியற்காலை
அன்று
நம்மைக் கண்டதும்
சூரிய உதயம் தாமதமென்றது!

நமது முத்த மழை கண்டு
சித்திரமாத வறுமை வானம்
அன்பளிப்பாய்
பொழிந்தன பூமழை!

நமைத்தவிர யாருமில்லா
உலகமதில் மகிழ்ந்தோம்
ஆனாலின்று
நாமிருவருமில்லா உலகத்தில்
நம்மைத் தேடுகிறது - பாவம்
காதல்!

4 comments:

விஜயன் said...

ரொம்ப நல்லா இருக்கு..!!

விஜயன் said...

சுப்ப்ரா இருக்கு

விஜயன் said...

chance ella..wonderful..may i know abt u?

Anonymous said...

Vanakam kaviyae
yen mana unarvugal yepadi ungal veralgalil padhindhadhu
solaa mudiyaamal thavithadhai ungal viralgal theetiyadhaal yen ullam magizhchee adaigeradhu.
vaazhthukal suresh...
valarga ungal kavidhai pani
anbuden RADHA...R

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments