Sunday, February 18, 2007

எண்ணங்களின் ஊர்வலம்

வாழ்த்துரை
=========

எண்ணங்கள் சில போதில் புயலாய், பூவாய், புனலாய், புதிராக வடிவெடுக்கக் கூடும் என்பதற்கு இந்நூல் சாட்சி. இந்நூலாசிரியர் திரு என் சுரேஷ் தன் எண்ணங்களை ஐம்பது பிம்பங்களாக வடித்துக்கிறார். பெயர் சூட்டப் படாத எண்ணக் குழுந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு இவர் தன் எண்ணங்களை ஆழ்ந்து நோக்கிய போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டு மனத்தில் தோன்றிய எண்ணங்கள் ஊர்வலம் செல்கின்றன. எனவே,

"எண்ணங்களின் ஊர்வலம்" என்பதையே இந்நூலுக்கு பெயராகச் சூட்டியிருக்கிறேன்.

இந்நூலுள், மனிதநேயம் காட்சியளிக்கிறது. இயல்பாகவே இளகிய மனங்கொண்ட திரு என். சுரேஷ், தாம் செல்லுமிடங்களில்லாம் தம் மனதை பாதித்த காட்சிகளை தமது எண்ணங்களில் பதிய வைக்கிறார். பல இடங்களில் இவருக்கு ஏற்படும். வருத்தம் நம்மை நெகிழ வைக்கிறது.

நாகரீகத்தால் மேன்மையுற்ற பலர் முதியோர் இல்லங்க்களில், தங்க்களுக்கு வேண்டிய கல்வி, செல்வம், பிள்ளை, உற்றார், உறவினர் ஆகிய எல்லாம் இருந்தும் அனாதைகள்

எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் !
எங்களை மறக்காமல்
எப்போழுதாவது
எங்களை பார்க்க வா!

என்று, முதியோர் இல்லத்தில் அன்பிற்காக ஏங்கிடும் அனாதைகள்.

இயந்திரங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயந்திரமாகவே மாறிவிட்ட மனித வாழ்க்கைக்குத் தேவை அன்பு. அந்த அன்பு இல்லாமல் மானுடம் செத்து விட்டதே!

மானுடத்தின் கைகளில் விலங்க்கு !
விடுதலை சொல்ல வந்த
மானுடம் சிலுவையில்!

என்று, எண்ணங்களால் சிலிர்த்தெடுக்கிறார்.

மனித குணம் சில வேளைகளில் மிருகத்தனம் கொள்வதைக் காண்கிறோம். அவ்வாறாகும் மிருக மனதை கொல்ல வேண்டும்! அதற்கு ஒரே மருந்து அன்பு ! தீர்ப்பும் எழுதுகிறார்.

பட்டினி கிடந்தவன் உணவுண்டதும்
காத்திருக்கும்
அவனது
பத்து நாள் தூக்கம்

என்று, வறுமையைப் படம் பிடித்த ஆசிரியர்,

பட்டினியின் உச்சத்திலும்
தொட்டிலிட
கட்டிலில் ஆட்டம் போடும்
முட்டாள் காமத்தின் அசிங்கம்

என்று, பட்டினிச் சமூகத்தை சாடுகிறார். பசியால் தூங்குகிறது குழந்தை; பசியால் துள்ளுகிறது காமம், என்னும் கேள்விக் கணை இவரின் சாடல்.

விருந்தினர் சென்றதும்
கணவனுக்கும் மனைவிக்கும்
நடக்கும் இரகசியச்சண்டை

என்று, போலியான மனிதர்களை காட்சியாக்குகிறார்.

நன்றியில்லாப் பிள்ளைகளிடம்
பிச்சையெடுத்து உயிர் வாழும்
முதியோர்களின்
கண்ணீர்த் துளிகள்

என்று, பிள்ளைகளால் புறந்தள்ளப்பட்ட பெற்றோர்களின் அவல நிலையைக் கண்டு அழவைக்கின்றார்.

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் சொல்எனுஞ் சொல்'

என்னும் குறல் கூறும் மகன்களைக் காண விரும்புவது தெரிகிறது.

சில வேளைகளில் சிலரின் கருத்துக்கள் சமூகத்துக்கு தேவைப்படும் மருந்தாக இருக்கு. ஆனால்
மருந்து தருகின்றவனையே நோயுற்ற சமூகம் அழிக்க நினைப்பதுண்டு. அத்தகைய செயலையும்
இந்நூலாசிரியர் விட்டுவைக்கவில்லை.

எழுத்தாளனை
மொத்தமாக எரித்த பிறகும்
அணைக்க முடியா
அவனின்
நெருப்பு எழுத்துகள்

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? என்னும் நெருப்பு வரிகளையும் காண முடிகிறது.
'யான் குற்றமுடையோனாயின் தீச்செவா என்னைச் சுடுதி' என்று, தீக்குள் பாய்ந்த சீதையைக் கூறும்கம்பன், "தீய்ந்தது அவ்எரி, அவள் கற்பின் தீயினால்" கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்ந்தது! என்பதைநினைவுபடுத்துவதாக அமைகிறது.

நல்ல கருத்துக்கள் என்றும் நிலத்திருக்கும். அதற்கு அழிவில்லை என்பதாக இவரின்
எண்ணங்களின் ஊர்வலம் புறப்படக் காண்கிறேன்

இவர் தம் எண்ணங்க்கள் எல்லோர் மனத்தையும் சென்றடைய வேண்டுமென்று விரும்புகிறேன். மேன்மேலும்அரிய எண்ணங்களைப் பதிவு செய்து பல புதிய நூல்களைப் படைத்திட வாழ்த்துகிறேன்

அன்புடன்
முனைவர் இர. வாசுதேவன்
=========================================================
(இந்த புத்தகத்தின் விற்பனையாளர்கள்)
திருமகள் நிலையம்
55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை
தி நகர்,சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments