Friday, February 6, 2009

மாபெரும் தவறுகளில் ஒன்று...


நகைகள் தன்னை அணிந்த
மகிழ்ச்சியில் - அவள்
கண்ணிமைகளை மூடாமல்...

தன்னைவிட தனது நகைகளை
அதீதமாய் நேசிக்கும் ஒருவளோடு
வாழ்வதெப்படி என்ற பயத்தில் - அவன்
கண்ணிமைகளைத் திறக்காமல்...

இருவருக்குள்ளும்
மௌனம் அரங்கேற..

இதெல்லாம் நமக்கென்று - என்ற
ஆதங்கத்தில் அநேக பார்வைகள்
கனவுகளுக்குள் செல்ல -அந்த
கனவுகளில் சில கவலைகளுக்குள்ளும்
சில மகிழ்ச்சிகளுக்குள்ளும் கரைந்தன!

அன்றாட வாழ்வில்
எல்லோரும் செய்து வரும்
மாபெரும் தவறுகளில் ஒன்று
வியப்பதும் வியக்க வைப்பதும்!

2 comments:

ராமலக்ஷ்மி said...

//வியப்பதும் வியக்க வைப்பதும்//
தவிர்க்க முடியாத தொடரல்கள்
அன்றாட வாழ்விலே!

சொல்லரசன் said...

//தன்னைவிட தனது நகைகளை
அதீதமாய் நேசிக்கும் ஒருவளோடு
வாழ்வதெப்படி என்ற பயத்தில் - அவன்
கண்ணிமைகளைத் திறக்காமல்...//

மணமுறிவு அதிகரிப்பது இதனால்தான்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments