Wednesday, February 4, 2009

நாளை விடுமுறை...

நாளை ஒருநாள்
எனக்கு விடுமுறை

இயந்திரவாழ்க்கைக்கு
ஒரு நாள் சுகாமான ஓய்வு

சுகமாக நானுறங்கி விழிக்க
நாளை காலை
கடிகாரத்திற்கும் விடுமுறை

என் அன்பு மனைவியோடு
காலையில் ஆலயதரிசனம்
இறைவனுக்கு என்னிதயம்
நன்றிமலர்களை சமர்ப்பிக்க

தாய்க்கும் பெரியோர்கள்
எல்லோருக்கும் எந்தன்
சிறப்பு வணக்கங்கள்

தள்ளாடும்
எனது தாய் சமைத்த
மதிய உணவு
குடும்பத்தாருடன்

அனாதை/முதியோர் இல்ல
தெய்வங்களோடு
என் மாலைப்பொழுது

தங்களின் நேரத்தை என்னிடம்
முன் குறித்தோருடன்
இரவு-உணவு;
அன்பின் பகிர்தல்!

3/2 அன்றைய
எனது பிறந்தநாள்
மகிழ்ந்து கொண்டிருக்க...

அடடே
விடுமுறை நாள் முடிந்ததே என
வியந்து போவதற்குள் - என்
கண்களை உறக்கம் மூடும்
அடுத்த நாள் காலை
கடிகாரசத்தத்தின் தொந்தரவு கேட்டவுடன்
மீண்டுமெந்தன் கண்கள் மலருமென்ற
நம்பிக்கையுடன்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

//மீண்டுமெந்தன் கண்கள் மலருமென்ற //

இந்த நம்பிக்கையுடன் அத்தனை நாட்களும் நகருகின்றன. விடுமுறை நாள் முடிவில் இன்னும் சற்று விசேஷமாய்..அதீத நம்பிக்கையுடன் அடுத்த ஆறு நாள் கழித்து வரவிருக்கும் விடுமுறையையும் ஒரு கணம் நினைத்து:)!

Anonymous said...

Dear Sir,

This poem is very beautiful and it normally reflects the life of everyone.

regards
Sukuna R

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments