Thursday, May 29, 2008

விமர்சனம் - அன்புள்ள அம்மாவிற்கு....!!!!

vishalam raman: wrote:
//அன்பு சுரேஷ் எந்தப் புத்தகத்தைப் பற்றியும் சிறப்பு அம்சங்கள் கூறினால் அது விமர்சனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் ,விமர்சனம் என்றால் என்ன ? நான் அந்தச் சொல்லைக் குறிப்பிட்டது தவறானால் தயவு செய்து
மன்னிக்கவும்
அன்புடன் விசாலம்//


அன்புள்ள அம்மா,

தலையில் ஒரு அடி அடித்து "சொல்லுடா" என்றால் சொல்பவன் என்னிடம் (மன்னிக்கவும் போன்ற) பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்வதை கேட்க எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கு.

விமர்சனம் - என்பதைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும். இருந்தாலும் தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பாடலை தன்னுடைய மகன் எப்படித் தான் புரிந்து வைத்திருக்கிறான் என்ற ஒரு தாயின் உணர்வை உங்களுடைய கேள்வியில் இருப்பதைக் கண்டு அதை மதிக்கிறேன். அதனால் இந்த சின்னப்ப்யலுக்கு தெரிந்தவைகளை எழுதுகிறேன். சிரிப்போடு கேளுங்கள்... :-)
தவறுகளிருப்பின் எனது மண்டையில் கொட்டுங்கள்:-)
அம்மா, விமர்சனம் என்பதைப் பற்றி நான் இப்படித் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்:
ஒரு சினிமா பார்த்து வந்து ஒருவன் தனது ஒரு வரி கருத்தை சொன்னால் அது ஒரு முழுமையான விமர்சனம் ஆகாது. ஏனென்றால் 18 வயதுள்ள ஒருவன் அதிலிருக்கும் சண்டைக் காட்சியை ரசித்த மயக்கத்தில், படம் "சூப்பர் போங்க" என்பான். இசை மீதிருக்கும் ஆர்வத்தில் ஒருவேளை அதில் நல்ல பாடல்கள் இருந்தால், "அம்மா அது நல்ல படம்" என்று நான் கூறக்குடும். சீரியலில் நடித்து வரும் எனது தம்பியை கேட்டால் அவனுக்கு பிடித்த நடிகரை பாராட்ட அந்த படம் ஆகா ஓகோ என்பான். கவலையில் இருக்கும் ஒருவன் ஒரு படம் பார்த்து அந்த படம் எப்படி இருந்தாலும் அதை "நாசமான பாடம்" எனக் கூற வாய்ப்புண்டு.

எதையும் திட்டுவோம் என்று சபதம் எடுத்து வாழ்பவர்கள், குற்றங்களை மட்டும் தங்கள் பார்வைகளில் பதித்துக் கொள்கிறவர்கள், மற்றும் அறிவாளிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டு உளருகிறவர்கள், குற்றம் கண்டு பிடித்தே புகழ்தேடும் பாவங்கள் மற்றும் ஒரு துறையிலும் தேவையான ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஒன்றும் புரியாததால் சும்மா பாராட்டித்திரிபவர்கள், என்ற கூட்டத்தார் எல்லாம் சொல்லும் கருத்துக்கள் ஒரு விமர்சனமாக முழுமையடைவதில்லை.

விமர்சனத்தைப் பொறுத்த வரையில் இதே நிலை தான் புத்தங்களானாலும் சரி, மற்றும் இயல் இசை நாடகம், அரசியல், விளையாட்டு, சமூகம் என எதுவாக இருந்தாலும் சரி! வெறும் கருத்துக்கள் என்பது வேறு; விமர்சனம் என்பது வேறு. இரண்டிற்கும் அப்படி ஒரு அபார தூரம்!

விமர்சனம் எழுதுபவன் எந்த ஒரு முன் தீர்மானங்களின் கண்ணாடியையும் அணிந்து கொண்டு எழுத ஆரம்பிக்கக் கூடாது.

குறிப்பிட்ட துறையில் சிறந்த அல்லது அடிப்படையானவைகளில் ஓரளவிற்கு முன் அனுபவமும், அலசி ஆறாய்கின்ற அறிவும், தொலைநோக்குப் பார்வையும், சுயசிந்தனையில் சிறப்பும், தன்னுடைய விமர்சனத்தை எப்படியெல்லாம் மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்ற யோசனையும், நல்ல ரசிப்புத்தன்மையும், சமூகப்பொறுப்பும் ...என நீண்ட பல தகுதிகள் இருப்பவராக ஒருவர் இருந்தால் தான் அவர் ஒரு நல்ல விமர்சனத்தை படைக்க முடியும். ஆம்! விமர்சனமும் ஒரு படைப்பு தான்! மிகவும் கஷ்டமான ஒரு படைப்பு!

உதாரணத்திற்கு: சலங்கை ஒலி என்ற படத்தில் " பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்" என்ற ஒரு பாடல் வரிக்கு காண்பித்த முக பாவனைகள், நர்த்தனம் இவை இரண்டும் எப்படியெல்லாம் தவறென்று அந்த படத்தில், சிறந்த ஒரு கலை விமர்சகனாக எழுதிக் கிழிப்பதோடு, ஆடியும் காட்டுவார், அதில் ஒரு கலை விமர்சக பத்திரிகை நிருபராக வரும் கமலஹாசன். (அதற்காக எல்லா நல்ல விமர்சகர்களும் அப்படியே செய்ய வேண்டுமென்று சொல்ல வரவில்லை:-) சன் டிவியில் டாப் டென் போன்ற நிகழ்ச்சிகளின் கொடுமையே தாங்க முடியல:-) இதில் அந்த நபர் நடித்து, நாட்டியமாடி, ஜோக்கடித்து நேயர்களை நோயாளிகளாக்கும் கொடுமைகள் வேண்டாம்:-)

அதே கலை விமர்சகர் ( கமலஹாசன்) அந்த நாட்டியம் ஆடியவள் தன்னுடைய பழைய காதலியின் மகள் என்று அறிந்ததும் பாசம் என்ற பாசியில் விழுந்து "விமர்சகர்" என்ற அந்தஸ்தை இழந்து, ஆகா! ஓகோ என்ற அந்த நாட்டியத்தை பாராட்டுவார். இந்த பாரட்டு விமர்சனமாகுமா? இது கருத்து, அதுவும் முட்டாள்த்தனமான கருத்து, பாசத்தின் வெளிப்பாட்டில் மலர்ந்த பொய்!

அம்மா, சங்கீதத்தில் நல்ல ஈடுபாடுள்ள உங்களுக்கு நம்ம சுப்புடு மாமவைப் பற்றி தெரியும். அவருடைய விமர்சங்களின் பலமும் பலவீனமும் பற்றித் தெரியும்.

இங்கே நான், காற்று வெளியினிலே... என்ற புத்தகத்தை ஒரு விமர்சகனாக வாசிக்கவில்லை. என் அன்புடன் அப்பா எழுதின புத்தகத்தில் அவரின் அனுபவங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வாசித்த புத்தகமிது. . இதில் என் மனதில் இவரைப் பற்றின என்க்குத் தெரிந்த பல நல்ல முன் தீர்மானங்களை/புரிதல்களை மனதிற்கொண்டு தான் வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்த மகிழ்ந்ததை பகிர்ந்து கொண்டேன், மகிழ்ந்தேன். என் அன்புள்ள அப்பாவின் நல்ல குணங்களை பின்பற்ற வேண்டுமென்ற தீர்மானங்கள் எடுத்தேன். இப்படியிருக்க அந்த புத்தகங்களின் எழுத்துப்பிழைகள் சிலவற்றைத் தவிற ஒரு தவறும் என் பார்வைக்கு படவில்லை. படவும் படாது:-)

எல்லாவற்றிற்கு மேலாக அவருடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் முன் நான் எந்த வகையிலும் அவருடைய புத்தகத்திற்கு கருத்துக்கள் கூட எழுத தகுதியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். அதனால் விமர்சனங்கள் என்று எனது பகிர்வுகளை சொல்வதை நான் தாழ்மையோடு ஏற்கவில்லை, அவ்வளவு தான்.

அம்மா, இதோ எந்தன் தலை, நான் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருப்பின் என்னை நீங்கள் செல்லமாய் கொட்டலாம்.

பாசத்தால் கொட்டலாம் என்றால், இது கருத்து!

இதற்கெல்லாம் கொட்டுவது தவறு. இருப்பினும் அது இருவர்களுடைய மனதிற்கு ஏற்றது போல் என்பது விமர்சனம்!

இது தான் நடந்தது, என்பது பகிர்வு!!!

நன்றி வணக்கம்
பாசமுடன் என் சுரேஷ்

1 comment:

Anonymous said...

vishalam raman wrote...
அன்பு சுரேஷ்!!! அப்பா ,,,விமர்சனத்திற்குள் இத்தனை
விஷயங்களா ? நான் கேட்டது நல்லதாகப் போயிற்று இல்லாவிட்டால் இத்தனை அருமையாக உதாரணத்துடன் நல்ல படைப்பைக் கண்டிருக்க முடியாது மிக்க நன்றி இப்போது குட்டு இல்லை செல்லமாக ஒரு தட்டு தான் ,,நன்றி அன்புடன்
விசாலம்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments


Anonymous commented:
very nice sir, I like this story

பூங்குழலி commented:
கண் கலங்குது ணா

ராமலக்ஷ்மி commented:
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

cheena (சீனா) commented:
This comment has been hidden from the blog.

அன்புடன் அருணா commented:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!

அறநெறி முனைவர் க. பழனிச்சாமி commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
vaalthukalhttp://www.kovaikkavi.woedpress.com

N Suresh commented:
மிக்க நன்றி அம்மா!பேரன்புடன் என் சுரேஷ்

vetha (kovaikkavi) commented:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.வேதா. இலங்காதிலகம்.http://www,kovaikkavi.wordpress.com

N Suresh commented:
மிக்க நன்றி திருமதி ரமலக்ஷ்மி அவர்களே!

N Suresh commented:
This comment has been hidden from the blog.

Anonymous commented:
This comment has been hidden from the blog.

Dhavappudhalvan commented:
This comment has been hidden from the blog.

Rathnavel Natarajan commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.

vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.

vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh

Anonymous commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.....

ராமலக்ஷ்மி commented:
தற்சமயம் நலம் என்பதறிந்து ஆறுதல். கடவுளுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி commented:
மிக நன்று. நல்வாழ்த்துக்கள்!

Shakthiprabha (Prabha Sridhar) commented:
அருமை. வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு புதுப் பொலிவுடன் துவக்கம்.

சமுத்ரா commented:
வாழ்த்துக்கள்

Anonymous commented:
GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.

Shakthiprabha (Prabha Sridhar) commented:
வாழ்த்துக்கள் :)