Wednesday, May 2, 2012

ஜெயந்தி என்ற அவள்...

அன்பர்களே… வணக்கம்! இறைவனின் கருணையால் எனது முதல் நாவல், “ஜெயந்தி என்ற அவள்…”, திருமகள் நிலையத்தினர் வெளியிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பணிவன்போடு தெரிவிக்கிறேன்! இதுவரை வெளியான எனது எட்டு கவிதைத் தொகுப்புகளுக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கும் நீங்கள் தந்த ஆதரவும் ஊக்கமும் தான் இந்த முதல் நாவல் எழுத எனக்கு உதவிற்று என்றால் அது மிகையாகாது! தொடர்ந்து உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் இந்த நாவலை வெளியிடும் திருமகள் நிலையத்தாரின் இணையதள விலாசம் www.thirumagalnilayam.com. இன்னமும் ஓரிரு வாரங்களில் தமிழ் புத்தகங்கள் விற்கப்படும் எல்லா இடங்களிலும் இந்த புத்தகம் எளிதாக கிடைக்க திருமகள் நிலையத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் நாவல் எனது ஆறுமாத உழைப்பும் தவிப்பும் பொறுமையும் கண்டு இறைவன் தந்த பரிசு என்றே நன்றியோடு உணர்கிறேன். இந்த கதைக்கான ஒரு கருவை என்னுயிர் நண்பர் ஒருவரோடு பேசும்போது ஒரு முறை பகிர்ந்தேன். அந்த இனியவர் தந்த அழுத்தமான ஊக்கம் தான் இந்த புத்தகம் என்பதை ஒரு நாளும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நாவலில் யாராலும் போற்றப்படும் ஜெயந்தி என்ற கதாபாத்திரமும், ஆச்சரியமான மனிதம் நிறைந்த இலக்கியன் என்ற ஒரு கதாபாத்திரமும் நம்மிடம் பல செய்திகளை சொல்கிறார்கள். நமது சிந்தனையை பல விலாசங்களுக்கு அவர்கள் கொண்டு செல்கின்றனர்; நமது சிந்தனைகளை புனிதமாக்கின்றனர்! இந்த நாவலை நீங்கள் வாசித்த பின்னர் உங்களினிய கருத்துக்கள் என்னைத் தேடி வருமென்ற நம்பிக்கையில்… என்றென்றும் அன்புடன் என் சுரேஷ்

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments