Friday, August 6, 2010

K ஜான்...

திரு. K. ஜான் என்பவர், Haemophilia என்ற நோயால் கஷ்ட்டப்படுகிறார்.

இரத்தத்தில் K- பேக்டரின் குறைவு தான் இந்த நோய்க்கு காரணம்.

உடலில் அடிபட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டால் என்னதான் கட்டு போட்டாலும் இரத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள "Factor 8" என்ற ஊசி போட்டால் மட்டுமே இரத்தக் கசிவு நிற்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன பலரின் சொத்துக்கள்/ நண்கொடைகள் வைத்துக்கொண்டு Haemophilia Society என்ற ஓர் அமைப்பு ஜான் போன்றோருக்கு ரூபாய் மூவாயிரம் ரூபாய்க்கு இந்த ஊசி குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் சென்னை அலுவலகம், தரமணியில் உள்ள VHS மருத்துவமனையில் உள்ளது.

என்ன தான் ஏழ்மையில் வாடினாலும் தன்னிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் எப்போதும் ஜான் வைப்பது வழக்கம். அவ்வப்போது ஆபத்து வரும் வேளைகளில் அந்தப் பணம் கொண்டு ஊசிபோட்டு இரத்தக் கசிவை நிற்க வைப்பது பல காலங்களாக நடந்து வருகின்ற ஒன்று. தொடர்ந்து சிறிய சம்பளத்தில் பல காலங்களாக வேலையும் செய்து வந்தார், அவருடைய தற்போதைய வயது 43. படிப்பு 12 ஆம் வகுப்பு வரை!

அண்மையில் ஓர் விபத்தில் சிக்கிக்கொண்ட ஜானிற்கு இடுப்பு, கால்கள் என பல இடங்களில் இரத்தம் கட்டிக்கொண்டு VHS மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. Haemophilia Society மூலமாக இவருக்கு பலமுறை ஊசிகள் குறைந்த விலையில் (மூவாயிரம் ரூபாய்க்கு) கொடுக்கப்பட்டது.

மொத்தச் செலவு 12000 ரூபாய்க்கு மேலாயிற்று. தன்னிடம் இருந்த 2000 ரூபாய் அடைத்து விட்டு, பாக்கி மாதாமாதம் கட்டிக்கொள்கிறேன் என்ற ஜானின் விண்ணப்பத்தின் அடிப்படையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று அங்கிருந்து மருந்தோடு ஓய்வும் எடுத்து வருகிறார். ஆனால் மருந்திற்கும் குடும்பச்செலவிற்கும் பொருளாதாரம் போதவில்லை.

இவருக்கு தற்போது வேலையும் இல்லை என்பது இன்னொரு கவலை. அப்படியே வேலை கிடைத்தாலும் உடனடியாக அவர் வேலைக்கு செல்ல இயலாத நிலை. கைத்தடி வைத்துத் தான் அவருக்கு தற்போது நடக்க முடிகிறது.

இவரின் மனைவி, சாதாரண பள்ளி ஒன்றில் ஆசிரியை. அந்த குறைந்த வருமானத்தில், வாடகையும் கொடுத்து, தங்களின் மகளை பன்னிரண்டாவது படிக்க வைத்து வாழ இந்த குடும்பம் மிகவும் கஷ்ட்டப்படுகிறது.

நோயும், வறுமையும் ஒன்று கூடினால், கொடுமை தான்!

இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதை அல்ல!

நேரடியாக ஜானை சந்திக்க விரும்புவோர் அவரை அவரது இல்லத்தில் சந்திக்கலாம். அவருடைய விலாசம்:

கெ. ஜான்
54/43, வெங்கடபத்தன் தெரு
புரசைவாக்கம், சென்னை -7

பேசி ஆறுதல் கூற நினைப்பவர்கள் அவரை 9840910567 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அவருக்கு பொருளாதார உதவி செய்ய விரும்புவோருக்கு அவருடைய வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள்:

K John
Catholic Syrian Bank
Annanagar Branch, Chennai 600 102
Savings Bank Account Number 20070619
IFSC Code Number: CSBK0000320
குறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.


மருத்துவச் செலவிற்கு நேரடியாக Haemophilia Society -க்கு பணம் அனுப்பி உதவ நினைப்பவர்களுக்கு தேவையான தகவல்கள்:

Haemophilia Society - Madras Chapter
Indian Overseas Bank
VHS Branch ( Branch Code 1744)
SB Account No.174401000000903
IFSC Code Number :IOBA0001744

குறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.
Heamophilia Society Contact Persons: Mr.Parthasarathy or/ and Mr.Vydyanathan
Address: Heamophilia Society- Madras Chapter, VHS Hospital Campus, Taramani,
Phone Number 22541652 / 9444014281


"அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,.."



அன்புடன்
என் சுரேஷ்

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments