Monday, January 7, 2008

மகிழ்கிறது


உனக்கு காதல் கடிதமெழுதும்
ஒவ்வொரு பொழுதும்
என்னில் புத்துயிர்பெற்று
மகிழும் நம் காதல்
உனைக்கண்டதும்
மௌனத்தில் மகிழ்கிறது

6 comments:

Anonymous said...

மௌனம்
உங்களுக்கு ரொம்ப பிடித்த வார்த்தையா?
ரொம்ப நல்லா எழுதுறீங்க!!!
அருணா

cheena (சீனா) said...

காதலர்கள் சந்திக்கும் போது காதல் மௌனமாகத்தான் இருக்கும். அருமையான எளிமையான கவிதை. நல்வாழ்த்துகள்.

சாம் தாத்தா said...

கவிதை நன்று...
திரு.சுரேஷ்.

ஒரே ஒரு எழுத்துப் பிழை.
புத்தியிர்= புத்துயிர்.

நீங்கள் ஒரு professional எழுத்தாளர்.

உரிமையோடு இதைக் குறிப்பிடுகிறேன்..

உங்களது "என் இனிய கவிதைகளே" நூலை நான் வாசித்திருக்கிறேன்.

N Suresh said...

அன்பினிய சாம் ஐயா,

எழுத்துப்பிழை நேர்ந்ததற்கு வருந்துகிறேன். எழுத்துப்பிழையை அன்போடு எடுத்து சொன்ன உங்கள் அன்பு உள்ளத்தை போற்றுகிறேன். உடனடியாக திருத்தம் செய்து விட்டேன்.

உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.

என் இனிய கவிதைகளே.. நீங்கள் வாசித்ததை அறிந்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

மிக்க நன்றி ஐயா

பாசமுடன்
என் சுரேஷ்

N Suresh said...

ஆம் அருணா,
எனக்கு மௌனத்தை மிகவும் பிடிக்கும்
அது என்னிடம் பேசிக்கொண்டேயிருக்கும் என்பதால்

நன்றி அருணா

N Suresh said...

நன்றி சீனா

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments