Friday, November 9, 2007

கண்ணாடி



என்னை எனக்கு
அடையாளம் காட்டின
மனசாட்சி!

என் உணர்வுகளுக்கு
ஆறுதல் சொல்லும் தோழி!

என் காதலிக்கு
கொடுத்த முதல் முத்தத்தை
நானே காண
வெட்கத்துடன்
படமெடுத்த சூரியன்!

எனை
ரசிக்கும் நிலா!

ஒரு நாளே
எனக்கு காய்ச்சலென்றாலும் கூட
எனைக் கண்டதும்
அழுதுவிடும் நண்பன்!

ஒவ்வொரு நாளும்
என் வயதின் நாட்காட்டி!

எனை காணாமல் தவிக்கும்
காதலியின் இதயம்!

என்
நிர்வாணத்தை மட்டுமா
என் மனதின் வேதனைகளையும்
படம் பிடித்த அதிசயம் நீ!

என்னில் உனக்கும்
உன்னில் எனக்கும்
எவ்வளவு
நாகரீக
புனித
அன்பான
உறவுகள் என் கண்ணாடியே!

இருப்பினும்
நீயேனின்று
வாடிப்போனாயோ!

நான் இல்லாமல் நீயிருக்கலாம்
நீயில்லாமல் நானிருக்கலாகுமா?

இதோ உனது உடையை
உன் சம்மதத்தோடு விலக்குகிறேன்
ஆகா!
புன்னகையில்
மலர்கிறதே உன் முகம்!

1 comment:

Anonymous said...

your poem is very good

best regards
D.Balaji

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments