Wednesday, February 4, 2009

முதல் இரவு...

நிச்சயம் முடிந்த இரவு முதல்
காத்திருந்த
பொன்னிரவு முதலிரவு

பல்லாயிரம்முறை மனதிற்குள்
பாடிக்கொண்டிருந்தது ஒரு பாடல்...
"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு"

இன்று திருமணநாள்...
காலை முதல் மாலை வரை
ஒருவருக்கொருவர் பேச முடியாமல்
சுற்றும் சொந்த பந்தங்கள்
நண்பர்களின் கிண்டல் -முதலிரவு

முஹூர்த்தம் வரவேற்பு அது இது
அந்த முறை இந்த முறையென
காலை முதல் மாலைவரை நகர்ந்திட
இருவரும் பேசிக்கொள்ள
காத்திருந்தது முதலிரவு

பகல் சென்று மாலை வந்திட
வந்தது இரவு வெகு தாமதமாக..
உடலும் மனமும் களைத்துப்போக
படுக்கையைக்
கண்டதும் உறங்கிவிட்டது
அவர்களுடைய முதலிரவும்!

No comments:

Post a Comment

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...