Tuesday, November 20, 2007
Wednesday, November 14, 2007
Tuesday, November 13, 2007
இனிய நாள்
ஜன்னலின் ஆடைகளை
நான்
விலக்கினேன்
முத்தமிட்டு சூரியகிரணங்கள்
என்னை எழுப்பியதும்!
மீண்டும் ஒரு நாள்
எனக்கு இதோ என்று
மந்தஹாசத்துடன்
பரிசளிக்கிறதே வாழ்க்கை!
ஏழ்மை ஒழிக்க
அடிமைச் சங்கிலிகள் உடைக்க
அன்பும் சமாதானமும் நிலைநாட்ட
இதோ இந்த பொடியன்
மாமலைகளோடு
பேச்சுவார்த்தைக்குத்
தயாராகிறான்!
இந்த நாளும்
இனிய நாளாக
என்னை வாழ்த்துங்கள்
அன்பு உள்ளங்களே!
பாவம் அவள்
கனகமனமொன்று உருகுகிறது
கண்மூடி கண்ணீர் உறைகிறது
முகமூடி உடைகிறது
அவள் மனதின் நிஜமுகமும் அழுகிறது!
பிள்ளைகள் நான்கிற்கு
கோலமிட்ட கணவன் மனம்
தன்னலத்தில் மகிழச்செல்ல
பிரிவின் கோபத்தில்
வாடிய மங்கையவள்
பரிவின் வறுமையாலும்
வாடியும் சுவசிக்கிறாள்!
பிளவுண்ட தன்மனதை
மறைக்க முடியா நிலையிலின்று
சிரித்து நடித்ததில் முச்சுமுட்ட
குமுறுதலில் பாவமின்று!
இறுக்கங்கள் இன்னமும் இறுக்க
உச்சத்தில் கவலைகள் திளைக்க
தெரிந்ததெல்லாம் நேர்வழியே
இன்றிவளுக்கு ஆறுதல்பெற ஏதுவழி?
உருகுமிந்த தங்கமனதிற்கு
தேவை வைத்தியமாம்
ஊர்கூடி சொல்கிறது
அவளுக்கு பைத்தியமாம்!
கண்ணீரின் விலாசம் தெரியாமல்
கண்களை இன்னமும் குருடாக்குகிறதே
கனிவற்ற இந்த கொடுமைச் சமுதாயம்!
Friday, November 9, 2007
கண்ணாடி
என்னை எனக்கு
அடையாளம் காட்டின
மனசாட்சி!
என் உணர்வுகளுக்கு
ஆறுதல் சொல்லும் தோழி!
என் காதலிக்கு
கொடுத்த முதல் முத்தத்தை
நானே காண
வெட்கத்துடன்
படமெடுத்த சூரியன்!
எனை
ரசிக்கும் நிலா!
ஒரு நாளே
எனக்கு காய்ச்சலென்றாலும் கூட
எனைக் கண்டதும்
அழுதுவிடும் நண்பன்!
ஒவ்வொரு நாளும்
என் வயதின் நாட்காட்டி!
எனை காணாமல் தவிக்கும்
காதலியின் இதயம்!
என்
நிர்வாணத்தை மட்டுமா
என் மனதின் வேதனைகளையும்
படம் பிடித்த அதிசயம் நீ!
என்னில் உனக்கும்
உன்னில் எனக்கும்
எவ்வளவு
நாகரீக
புனித
அன்பான
உறவுகள் என் கண்ணாடியே!
இருப்பினும்
நீயேனின்று
வாடிப்போனாயோ!
நான் இல்லாமல் நீயிருக்கலாம்
நீயில்லாமல் நானிருக்கலாகுமா?
இதோ உனது உடையை
உன் சம்மதத்தோடு விலக்குகிறேன்
ஆகா!
புன்னகையில்
மலர்கிறதே உன் முகம்!
என் கவிதை... இங்கே கேளுங்கள்....
|
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
|
Recent Comments
Anonymous commented:
very nice sir, I like this story
பூங்குழலி commented:
கண் கலங்குது ணா
ராமலக்ஷ்மி commented:
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
cheena (சீனா) commented:
This comment has been hidden from the blog.
அன்புடன் அருணா commented:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!
அறநெறி முனைவர் க. பழனிச்சாமி commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
vaalthukalhttp://www.kovaikkavi.woedpress.com
N Suresh commented:
மிக்க நன்றி அம்மா!பேரன்புடன் என் சுரேஷ்
vetha (kovaikkavi) commented:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.வேதா. இலங்காதிலகம்.http://www,kovaikkavi.wordpress.com
N Suresh commented:
மிக்க நன்றி திருமதி ரமலக்ஷ்மி அவர்களே!
N Suresh commented:
This comment has been hidden from the blog.
Anonymous commented:
This comment has been hidden from the blog.
Dhavappudhalvan commented:
This comment has been hidden from the blog.
Rathnavel Natarajan commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.
vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.
vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.
vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh
Anonymous commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.....
ராமலக்ஷ்மி commented:
தற்சமயம் நலம் என்பதறிந்து ஆறுதல். கடவுளுக்கு நன்றி.
ராமலக்ஷ்மி commented:
மிக நன்று. நல்வாழ்த்துக்கள்!
Shakthiprabha (Prabha Sridhar) commented:
அருமை. வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு புதுப் பொலிவுடன் துவக்கம்.
சமுத்ரா commented:
வாழ்த்துக்கள்
Anonymous commented:
GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.
Shakthiprabha (Prabha Sridhar) commented:
வாழ்த்துக்கள் :)