Saturday, February 9, 2008

தாகம்

கட்டின தாலியை மறந்தவினிடம்
தாலி தாகமென்றாள்
ஆண்களால் வேசியாக்கப்பட்ட
பாவம் அவள்!

காலத்தின் கோலத்தில்
புயல் வீசின சோகமிவளக்கு
குலமகளாக ஆசையில்லாமலா?

மறுவாழ்வு பெற
மருத்துவமனைகளின் கதவுகளும்
மணமுடிக்கும் பொன்மனங்களின் கதவுகளும்
திறக்கட்டும்!

No comments:

Post a Comment

என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...