
ஜன்னலின் ஆடைகளை
நான்
விலக்கினேன்
முத்தமிட்டு சூரியகிரணங்கள்
என்னை எழுப்பியதும்!
மீண்டும் ஒரு நாள்
எனக்கு இதோ என்று
மந்தஹாசத்துடன்
பரிசளிக்கிறதே வாழ்க்கை!
ஏழ்மை ஒழிக்க
அடிமைச் சங்கிலிகள் உடைக்க
அன்பும் சமாதானமும் நிலைநாட்ட
இதோ இந்த பொடியன்
மாமலைகளோடு
பேச்சுவார்த்தைக்குத்
தயாராகிறான்!
இந்த நாளும்
இனிய நாளாக
என்னை வாழ்த்துங்கள்
அன்பு உள்ளங்களே!
No comments:
Post a Comment
என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...