Thursday, May 17, 2012

அந்தப் பெண் காவலர்...


ஐந்து வருடங்களுக்கு முன்னர்…

அன்று மாலை மிகவும் களைப்பாக தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டேன்.

சென்னையை நோக்கின எனது ஒன்றரை மணிநேர பயணத்தில், காரிலேயே களைப்பால் உறங்கிவிட்டேன்.

கார் ஓட்டுனர் பழனி என்றும் நல்ல பார்த்தசாரதி.

நாங்கள் வீடு வந்து சேர இன்னமும் இருபது நிமிடம் இருக்கும் நேரம் எனது அலைபேசி அடித்தது.

என் அலுவலகத்தின் தலமை நிர்வாக இயக்குனர் தான் அழைக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

-        Hi Suresh, I am going for an urgent business meeting to Taj. 
         I want you to be there with me. 
         That English team really needs your convincing presentation. Please come to my home straight.
-        Sir, Sir…

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதை இந்த பைத்தியக்காரன் காலையிலேயே சொல்லித் தொலைத்திருக்கலாமே! - என்று புலம்பினேன்.

என்ன தான் உயர்ந்த பதவி எனினும் ஒரு தொழிலாளி என்பவன் அடிமை தான்! - என்று மீண்டும் என் மண்டைக்கு அறிவு சொன்னது!

களைப்பு, வெறுப்பு, கோபம், புலம்பல் என என் மனநிலை என்னை கரைத்துக்கொண்டிருந்தது.

" பழனி! வண்டியை அப்படியே ஓர் யூடேர்ண் அடித்து விட வேண்டியது தான்.
முதலாளி கட்டளை. பழனி! ஒன்று செய்யுங்கள், மீட்டிங்கிற்கு நான் அவருடன் காரில் செல்கிறேன். என்னை நீங்கள் அவரின் வீட்டின் சாலையின் எதிரில் இறக்கி விட்டு நீங்கள் இந்த காரிலேயே உங்கள் வீட்டிற்கு சென்று காலை வாருங்கள். நடக்க இயலாத உங்கள் மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றீர்களே”  என்றேன்.

“ரொம்ப நன்றி சார்” - பழனியின் முகத்தில் சந்தோஷம் காண்பதில் எனக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி.

தலமை நிர்வாக இயக்குனரின் வீட்டிற்கு எதிரே பழனி என்னை இறக்கி விட்டார்.

பழனி காரில் புறப்பட்டார்.

அப்போது நேரம் இரவு 7.30.

அந்த இடத்தில் அப்படி ஓர் இருட்டு.

நான் அங்கிருந்து சாலையை கடந்து (Road Crossing செய்து) தான் எதிரில் உள்ள என் முதலாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அதற்காக முயற்சிக்கிறேன். ஆனால் நந்தனத்தில் உள்ள அந்த சாலையில் ஒன்றின் பின் ஒன்றாக வரும் வாகனங்கள் என்னை சாலை கடக்க அனுமதிக்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

என்னடா இது! என்று வெறுப்புடன் இருக்க என்னருகே காக்கி உடையில் ஓர் இளம் பெண் காவலாளர் அயர்வோடு நிற்பதைக் கண்டேன்.

அவர் மிக வாட்ட சாட்டமுடனும் அழகாகவும்  இருந்தார். ஆனால் அவர்களின் முகத்தில் சொல்ல முடியாத ஓர் உணர்வு இருந்தது. அவர்கள் என்னையே பார்ப்பதாக நான் புரிந்து கொண்டேன்.

அவரிடம் சென்றேன்.

- மேடம் என்னிடம் நீங்கள் ஏதாவது பேச வேண்டுமா?

- இல்லை

- ஏன் அழுகுறீர்கள்?

- வயிற்று வலி தாங்க முடியவில்லை சார். வெளி நாட்டிலிருந்து ஒரு பிரசிடண்ட் சென்னைக்கு வந்திருக்காங்க… அவங்க கார் இந்த சாலை கடந்து தொலைக்கர வரைக்கும் நான் இங்கு நின்று தான் ஆக வேண்டும்.

- இது என்ன கொடுமை. இதற்கு ஓர் ஆண் காவலரையே இந்த பணிக்கு போட்டிருக்கலாமே

- ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்கறீங்க தானே! அப்போ நீங்களும் எங்களைப் போன்று பொறுப்பெடுங்கள் - என்றால் எங்களிடம் என்ன பதில்?

- உங்களுடைய பிரச்சனை என்னவென்று நான் புரிந்து கொண்டேன். மேடம் நீங்க என்னோடு தயவாக வாங்க; எதிரிலுள்ள அந்த வீட்டிற்கு தான் நான் செல்கிறேன்.

- சரி வருகிறேன்.

முதலாளி தன் வீட்டுக் கதவைத் திறந்ததும் என்னையும் அந்த பெண் காவலாளரையும் அதிசயத்தோடு பார்த்தார்.

வடநாட்டுக்கார முதலாளியின் மனதில் என்னமோ ஏனோ - ஒரு பயம்.

வடிவேலு அண்ணனின் ஸ்டையில் என் மனம் சொன்னது “ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்” 

சில நொடிகளுக்குப் பிறகு..

நான் எனது சாதாரண குரலில், எந்த அர்த்தமற்ற வெட்கமுமின்றி என் முதலாளியின் மனையிடம் சொன்னேன்.

-Madam she has severe stomach pain.  May be it’s due to her period timings but I don’t know as she finds it shy to tell.  Please speak to her and kindly take care of her.  I just met her on the road while crossing.

அந்த வடநாட்டு முதலாளியம்மா அன்புடனும் கனிவுடனும் அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

பத்தே நிமிடங்களில் காக்கி உடை மாறி, ஒரு புதிய சுரிதாரில் அந்தப் பெண் காவலர் வந்தார்.

அதற்குள் அந்த வீட்டில் வேலை செய்யும் சாந்தி அக்கா, ஒரு கோப்பை காப்பியும் மூன்று பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு அன்போடு கொடுத்தார்கள்.

கொஞ்சம் காப்பியும் ஒரு பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு பாவம் அந்த காவல் அதிகாரி எல்லோருக்கும் நன்றி சொல்லி புறப்பட்டார்கள்.

இல்லை இல்லை தனக்கு குறித்துள்ள அந்த சாலைக்கு ஓடினார்கள்!

பெண்களுக்காக போராடும் பலரும் கூட பெண்களின் அடிப்படை தேவைகளைப் பற்றி உணர்ந்து கொள்வதில்லை என்று அந்த பெண் காவலாளர் என்னிடம் சொன்னது நான் முன்னமே இதை வாசிக்கும் உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன், மன்னிக்கவும்.

நானும் முதலாளியும் மீட்டிங்கிற்கு புறப்படும் நேரம்.... முதலாளி அம்மா … என்னிடம்-

-Is she your relative?
-Yes
-How
-We both are Tamilians!

Wednesday, May 2, 2012

ஜெயந்தி என்ற அவள்...

அன்பர்களே… வணக்கம்! இறைவனின் கருணையால் எனது முதல் நாவல், “ஜெயந்தி என்ற அவள்…”, திருமகள் நிலையத்தினர் வெளியிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பணிவன்போடு தெரிவிக்கிறேன்! இதுவரை வெளியான எனது எட்டு கவிதைத் தொகுப்புகளுக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கும் நீங்கள் தந்த ஆதரவும் ஊக்கமும் தான் இந்த முதல் நாவல் எழுத எனக்கு உதவிற்று என்றால் அது மிகையாகாது! தொடர்ந்து உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் இந்த நாவலை வெளியிடும் திருமகள் நிலையத்தாரின் இணையதள விலாசம் www.thirumagalnilayam.com. இன்னமும் ஓரிரு வாரங்களில் தமிழ் புத்தகங்கள் விற்கப்படும் எல்லா இடங்களிலும் இந்த புத்தகம் எளிதாக கிடைக்க திருமகள் நிலையத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் நாவல் எனது ஆறுமாத உழைப்பும் தவிப்பும் பொறுமையும் கண்டு இறைவன் தந்த பரிசு என்றே நன்றியோடு உணர்கிறேன். இந்த கதைக்கான ஒரு கருவை என்னுயிர் நண்பர் ஒருவரோடு பேசும்போது ஒரு முறை பகிர்ந்தேன். அந்த இனியவர் தந்த அழுத்தமான ஊக்கம் தான் இந்த புத்தகம் என்பதை ஒரு நாளும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நாவலில் யாராலும் போற்றப்படும் ஜெயந்தி என்ற கதாபாத்திரமும், ஆச்சரியமான மனிதம் நிறைந்த இலக்கியன் என்ற ஒரு கதாபாத்திரமும் நம்மிடம் பல செய்திகளை சொல்கிறார்கள். நமது சிந்தனையை பல விலாசங்களுக்கு அவர்கள் கொண்டு செல்கின்றனர்; நமது சிந்தனைகளை புனிதமாக்கின்றனர்! இந்த நாவலை நீங்கள் வாசித்த பின்னர் உங்களினிய கருத்துக்கள் என்னைத் தேடி வருமென்ற நம்பிக்கையில்… என்றென்றும் அன்புடன் என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments